மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி

 
இந்தியா

“வன்முறையில் ஈடுபட்டால் 3 மடங்கு அபராதம்” - மேற்கு வங்க முதல்வர் சுவேந்து எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பவானிபூரில் வர்த்தக அமைப்​பு​களின் பிர​தி​நி​தி​கள் கூட்​டம் நேற்று நடைபெற்றது.

இ​க்கூட்டத்தில் முதல்​வர் சுவேந்து அதி​காரி பேசுகை​யில், “போ​ராட்​டம் நடத்த அனை​வருக்​கும் உரிமை உண்​டு. ஆனால், அது வன்​முறை​யாக மாறக் கூடாது. யாராவது தொழிற்​சாலைகளைச் சேதப்​படுத்​தி​னால், சிறை தண்​டனை​யுடன் 3 மடங்கு அபராத​மும் விதிக்​கப்​படும். ரூ.1 கோடி மதிப்​புள்ள சொத்து சேதமடைந்​தால், ரூ.3 கோடி வசூலிக்​கப்​படும். அபராதம் செலுத்​தத் தவறி​னால், குற்றம்சாட்​டப்​பட்​ட​வர்​களின் சொத்​துக்​கள் ஏலம் விடப்​படும்” என்று எச்​சரித்​தார்.

பொது அமை​தி​யைப் பாது​காக்​க​வும், முதலீட்​டாளர்​களின் நம்பிக்கையை அதி​கரிக்​க​வும் இந்த அதிரடி சட்​டத்​ திருத்தங்களை மேற்கு வங்க சட்​டப்​பேரவை கடந்த ஜூன் 28ம் தேதி நிறைவேற்றியது. இச்​சட்​டத்​தின்​படி, வன்​முறை​யில் ஈடுபடுவோரை விசா​ரணை​யின்றி 12 மாதங்​கள் வரை தடுப்​புக் காவலில் வைக்​க​வும் வழி ​வகை செய்​யப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்​கது.

SCROLL FOR NEXT