மேற்கு வங்கத்தின் சோனார்பூரில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட வர்களை நேற்று சந்திக்கச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள் வீசப்பட்டன. இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் ஹெல்மெட் அணிந்து கொண்டார். படம்: பிடிஐ

 
இந்தியா

“என்னைக் கொல்ல விரும்புகிறார்கள்” - தாக்குதல் குறித்து திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கருத்து

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் தேர்​தலுக்கு பிந்​தைய வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​திக்​கச் சென்ற திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி. அபிஷேக் பானர்ஜி தாக்​கப்​பட்​டார்.

மேற்கு வங்​கத்​தில் தேர்​தலுக்கு பிந்​தைய வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் அவர்​களின் குடும்​பங்​களை சந்​திப்​ப​தற்​காக திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி. அபிஷேக் பானர்ஜி நேற்று சோனார்​பூர் பகு​திக்​குச் சென்​றிருந்​தார். அப்​போது அவர் மீது கற்​களும் முட்​டைகளும் வீசப்​பட்​டன. இந்த தாக்​குதலுக்கு மத்​தி​யில், ஹெல்​மெட் அணிந்​திருந்த அபிஷேக் பானர்​ஜியை பாது​காப்​புப் படை​யினர் பாது​காப்​பாக அழைத்​துச் சென்​றனர்.

இந்த சம்​பவத்​தின்போது, பாஜக தொண்​டர்​கள் அபிஷேக் பானர்​ஜிக்கு எதி​ராக ‘சோர் சோர்' (திருடன் திருடன்) என முழக்​கமிட்​ட​தாக கூறப்​படு​கிறது. பதற்​றம் அதி​கரித்​ததைத் தொடர்ந்​து, பாது​காப்​புப் படை​யினர் அவரைச் சூழ்ந்து பாது​காப்​பாக அழைத்​துச் செல்​லும் காட்​சிகள் சமூகவலைதளங்களில் வெளி​யாகி​யுள்​ளன.

தாக்​குதல் குறித்து அபிஷேக் பானர்ஜி கூறும்போது, “இந்தசம்​பவம் அனைத்​தும் பாஜக​வால் திட்​ட​மிட்டு நடத்​தப்​பட்​டுள்​ளது. அவர்​களின் ஜனநாயகத்​துக்கு இதுவே உதா​ரணம். இவர்​கள் ஆட்​சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்​லை. போலீ​ஸாரை எங்​கும் காண முடிய​வில்​லை. எனது பயணம் குறித்து அதி​காரி​களுக்கு முன்​கூட்​டியே தகவல் தரப்​பட்​டுள்​ளது என்​றாலும் போதிய பாது​காப்பு வழங்​கப்​பட​வில்​லை.

போலீ​ஸாரும் பாது​காப்​புப் படை​யினரும் பாது​காப்பை உறுதி செய்​யும் வரை நான் இங்​கிருந்து நகர மாட்​டேன். அவர்​கள் வீட்டை உடைக்க முயல்​கிறார்​கள், என்​னைக் கொல்ல விரும்​பு​கிறார்​கள்” என்​றார். அபிஷேக் பானர்​ஜி​யின் இந்​தப் பயணத்​தில் உள்​ளூர் மக்​களும் அவருடன் வாக்​கு​வாதத்​தில்​ ஈடு​பட்​ட​தாக தகவல்​கள்​ தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT