இந்தியா

கல்வி முறையை அடியோடு மாற்ற வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நமது நாட்​டின் கல்வி முறையை அடியோடு மாற்றி அமைக்க வேண்​டும் என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி வலியுறுத்தி உள்​ளார்.

நீட் தேர்வு முறைக்கு எதி​ராக உத்​த​ராகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று முன்​தினம் மாணவர்​கள் பேரணி நடை​பெற்​றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி கூறிய​தாவது: கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​ட​தால் ரியா குமாரி என்ற மாணவி தற்​கொலை செய்து கொண்​டார். அவரது தந்தை ராஜேஷ் குமாரைச் சந்​தித்து நான் ஆறு​தல் தெரி​வித்​தேன்.

மகள் ரியாவை இழந்து விட்​ட​தால் ராஜேஷ்கு​மார் மிக​வும் உடைந்து போயிருந்​தார். அதைக் கண்ட அனை​வரின் கண்களிலும் கண்​ணீர் பெரு​கியது. இது ஒரு குடும்​பத்​தின் துயரம் மட்​டுமல்ல. வினாத்​தாள் கசிவு விவ​காரம் இது​போன்ற பல குடும்​பங்​களிடம் இருந்து அவர்​களின் குழந்​தைகளைப் பறித்​து​விட்​டது. தொடர்ச்​சி​யாகத் தேர்வு வினாத்​தாள்​கள் கசிவது பல குடும்பங்களுக்கு ஈடு​ செய்ய முடி​யாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு வினாத்​தாள் கசிவு என்​பது ஒரு கட்​டமைக்​கப்​பட்ட பிரச்சினை​யாக மாறி​விட்​டது. இப்​பிரச்​சினைக்​குத் தீர்வு காண அரசி​யல் கட்​சிகளின் ஒரு​மித்த கருத்து தேவை. கடந்த பத்​தாண்​டு​களில் வினாத்​தாள் கசிவு​களால் சுமார் 7.5 கோடி மாணவர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பயிற்சி மையங்​கள், தேர்வு மையங்​கள் முதல் வினாத்​தாள் தயாரிப்​பாளர்​கள், மொழிபெயர்ப்​பாளர்​கள், போக்​கு​வரத்து மற்​றும் விநி​யோகஸ்​தர்​கள், தேசி​யத் தேர்​வு​கள் முகமை (என்​டிஏ), கல்வி அமைச்​சகம் வரை ஒட்​டுமொத்த கல்​விச் சூழல் அமைப்​பும் இப்​பிரச்​சினை​யில் சம்​பந்​தப்​பட்​டுள்​ளது.

இந்த ஊழல் நிறைந்த அமைப்​பால் வினாத்​தாள் கசிவு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. குற்​ற​வாளிகளுக்கு தண்​டனை பெற்​றுத் தரு​வது உள்​ளிட்ட எந்த நடவடிக்​கையும் இது​வரை எடுக்​கப்​பட​வில்​லை. எனவே, கல்​வி, தேர்வு முறை அமைப்பை அடியோடு மாற்றி அமைக்க வேண்​டும. குழந்​தைகள் மன அழுத்​தத்​துக்​குப் பதிலாகப் பாது​காப்பை உணரும் வகை​யிலும், பெற்​றோர்​கள் கண்​ணீருக்​குப் பதிலாகத் தங்​கள் தியாகங்​களுக்​கான பலனை அடை​யும் வகை​யிலும் ஒரு சூழலை நாம் உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்​.

SCROLL FOR NEXT