ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகரைத் தலைமையிடமாகக் கொண்ட சினார் கார்ப்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புத்காமில் உள்ள அஷ்தார் காலி பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீஸார், சிஆர்பிஎஃப் படையினர் இணைந்து நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, வீரர்கள் சிலரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்தனர். அவர்களைச் சோதனை செய்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.