புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் கைதான சுதந்திரா பரத்வாஜை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீட் வினாத்தாள் கசிவு போராட்டத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் தந்தையை தாக்கிய சுதந்திரா பரத்வாஜை கைது செய்யக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 5-ம் தேதி சுதந்திரா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லி கர்கர்டூமா நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதியின் வீட்டில் பரத்வாஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.