இந்தியா

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாட்டை சிபிஐ விசாரிக்க கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யுடன் தொடர்புடையவர்களின் செயல்​பாடு​களை சிபிஐ விசா​ரிக்​கக் கோரிய மனுவை அவசர​மாக விசா​ரிக்க உச்​ச நீ​தி​மன்​றம் மறுத்துவிட்​டது.

போலி வழக்​கறிஞர்​கள் தொடர்​பான வழக்கு விசா​ரணை​யில் கருத்து தெரி​வித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், வேலை​யில்லா இளைஞர்​கள் கரப்​பான் பூச்​சிகள்​போல சமூக ஊடகங்​களி​லும், ஊடகங்​களி​லும் ஒட்​டுண்​ணி​களாக இருந்து தாக்​குதல் நடத்​துகின்​றனர் என கூறி​யிருந்​தார். இக்​கருத்தை அடுத்து கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் சமூக வலை​தளங்​களில் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்டு அதில் லட்​சக் ​கணக்​கானோர் பின்​ தொடர்ந்​தது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில், போலி வழக்​கறிஞர்​கள் குறித்த குற்றச்சாட்டுகளை​யும், கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் செயல்பாடுகளையும் சிபிஐ விசா​ரிக்​க​வும், உச்ச நீதி​மன்​றத்​தில் நேரலை விசா​ரணையை வணிக ரீதி​யாகப் பயன்​படுத்தி வருவாய் ஈட்​டு​வதை தடுக்​க​வும் உத்​தர​விடக் கோரி ராஜா சௌத்ரி உள்​ளிட்​டோர் ரிட் மனுக்​களைத் தாக்​கல் செய்​துள்​ளனர்.

இந்த ரிட் மனுக்​களை விரைந்து விசா​ரிக்​கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன் வழக்​கறிஞர்​கள் ராஜா சௌத்​ரி, என்​.கே. கோசு​வாமி ஆகியோர் நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்​தனர்.

அப்​போது, "உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி விளக்​கம் அளித்​த ​பிறகும் விஷமத்​தன​மாக, திரித்​துக் கூறும் போக்கு தொடர்​கிறது. இந்த விவ​காரம் தொடர்​புடைய மனுக்​களை விரைந்து விசா​ரிக்க வேண்​டும்" என்று முறை​யிட்​டனர். அப்​போது தலைமை நீதிபதி இதை சென்​டிமென்​டாக எடுத்​துக் கொள்ள வேண்​டாம் என்று குறிப்​பிட்டு விரைந்து விசா​ரிக்​க​வும் மறுப்பு தெரி​வித்​தார்.

இதனிடையே, கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சியை சமூக வலைதள கணக்​கு​களை மத்​திய அரசு முடக்​கியது. இதற்கு எதி​ராக கரப்பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் நிறு​வனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில்​ வழக்​கு தொடர்ந்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT