இந்தியா

வந்தே மாதரம் தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த பொதுநல மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொது நிகழ்ச்​சிகளி​லும், கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடலை முழு​மை​யாக பாட மத்​திய உள்​துறை அமைச்​சகம் வெளி​யிட்ட சுற்​றறிக்​கையை எதிர்த்த பொதுநல மனுவை உச்​ச நீ​தி​மன்​றம் தள்ளு​படி செய்​தது.

இது தொடர்​பாக மும்​பையை சேர்ந்த முகமது சயீது நூரி தாக்​கல் செய்த பொதுநல மனு​வில், ‘‘பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலை​யங்​களி​லும் வந்தே மாதரம் பாடலை முழு​மை​யாக பாட மத்​திய உள்​துறை அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் அனுப்​பிய சுற்​றறிக்​கையை ரத்து செய்ய வேண்​டும். வந்தே மாதரம் தேசிய பாடலை பாடு​வது கட்​டாயமல்ல என்று அறிவிக்க வேண்டும்’’ என்று தெரி​வித்​திருந்​தார்.

          

இந்​தப் பொதுநல மனுவை உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் அமர்வு விசா​ரித்​தது. அப்​போது அந்த அமர்​வில் இடம்​பெற்ற நீதிபதி ஜோய்​மால்யா பக்சி கூறுகை​யி்ல், ‘‘மத்​திய அரசின் சுற்​றறிக்கை அறிவுறுத்தலாக மட்​டுமே உள்​ளது. இந்த அறி​வுறுத்​தலை பின்​பற்​றாதவர்​களுக்கு எவ்​வித தண்​டனை​யும் குறிப்பிடவில்லை என்​ப​தால் வந்தே மாதரம் பாடலை பாட வேண்​டும் என்று கட்​டாயப்​படுத்​த​வில்​லை’’ என்று குறிப்பிட்​டார்.

மனு​தா​ரர் தரப்பு மூத்த வழக்​கறிஞர் சஞ்​சய் ஹெக்டே வாதிடு​கை​யில், ‘‘வந்தே மாதரம் பாடலை பாடாதவர்​களுக்கு எவ்​வித தண்​டனை​யும் குறிப்​பிட​வில்லை என்றாலும் சமூக நிர்​பந்​தம் உரு​வாகி, பாடாதவர்​கள் தனிமைப்​படுத்​தப்​பட்​டு, பாகு​பாடு காட்​டப்​படும். இணங்கிப் போகு​மாறு மிரட்​டப்​படு​வார்​கள்’’ என்​றார்.

அப்​போது தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், ‘‘மத்​திய உள்துறை அமைச்​சகத்​தின் சுற்​றறிக்​கை​யில், வந்தே மாதரம் பாடலை பாடலாம் என்று உள்​ளது. பாட மறுப்பவர்களுக்கு தண்​டனையோ, சிறையோ இல்​லை. மனு​தா​ரரின் கல்வி நிலை​யத்​தில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்​டும் என்று யாரும் கேட்​க​வில்​லை’’ என்று தெரிவித்​தார்.

மனு​தா​ரர் தரப்பு மூத்த வழக்​கறிஞர் சஞ்​சய் ஹெக்டே வாதிடு​கை​யில், திரை​யங்​கு​களில் தேசிய கீதம் ஒலி​பரப்புவது கட்​டாயமல்ல என்ற உச்​ச நீ​தி​மன்ற தீர்ப்பையும், மத காரணங்​களால் தேசிய கீதத்தை பாட மறுத்த பள்ளி மாணவன் பிஜோய் இம்​மானுவை பாதுகாத்த உச்​சநீ​தி​மன்ற உத்​தர​வை​யும் சுட்​டிக் காட்டினார். தேசப்​பற்றை வற்​புறுத்த முடி​யாது என்​றும் அவர் கூறி​னார்.

இதைத் தொடர்ந்து நீதிப​தி​கள், ‘‘இந்த விவ​காரத்​தில் மத்திய உள்​துறை அமைச்​சகத்​தின் சுற்​றறிக்​கை​யால் பாகு​பாட்​டுக்கு உள்​ளாக்​கப்​பட்டு பாதிக்​கப்​பட்​டால் மீண்டும் வழக்கு தொடருங்​கள். தற்​போதைய நிலை​யில் இந்​தப் பொதுநல மனுவை வி​சா​ரணைக்கு ஏற்க முடி​யாது’’ என்​று கூறி மனுவை தள்​ளு​படி செய்​தனர்​.

SCROLL FOR NEXT