லாலு பிர​சாத் யாதவ் | கோப்புப்படம்

 
இந்தியா

சிபிஐ வழக்கை ரத்து கோரும் லாலு பிரசாத் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே வேலை முறைகேடு புகார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2004-2009-ம் ஆண்​டில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐ.மு. கூட்​டணி ஆட்சி செய்​த​போது ரயில்வே அமைச்​ச​ராக லாலு பிர​சாத் யாதவ் இருந்​தார். அப்​போது, நிலத்தை லஞ்​ச​மாகப் பெற்​றுக் கொண்டு ரயில்வே துறை​யில் பலருக்கு வேலை அளித்​த​தாக லாலு பிர​சாத் யாதவ், அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ராகச் சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​தது.

இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி லாலு பிர​சாத் யாதவ் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்​ச நீ​தி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், என்​.கே.சிங் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. லாலு பிர​சாத் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘‘வழக்கு தொடர அனு​ம​தி​யில்​லாமல் நடத்​தப்​பட்ட புலன்​வி​சா​ரணை ஏற்​புடைதல்ல. எனவே சிபிஐ வழக்கை ரத்து செய்ய வேண்​டும்’’ என்று வாதிட்​டார்.

          

இதற்​குச் சிபிஐ தரப்​பில் ஆஜரான கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் எஸ்​.​வி. ராஜு, ‘‘இந்த வழக்​குக்கு முன் அனு​மதி தேவை​யில்​லை’’ என்று வாதிட்​டார்.

வழக்கு தொடர அனு​மதி சார்ந்த விவ​காரத்தை சிபிஐ சிறப்பு நீதி​மன்​றத்​தில் எழுப்ப அனு​ம​தித்த உச்​ச நீ​தி​மன்​றம், லாலுவின் மேல்​முறை​யீடு மனுவை தள்​ளு​படி செய்​தது.

SCROLL FOR NEXT