இந்தியா

மலேரியாவை இந்தியா விரைவில் ஒழிக்கும்: மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்​திய மருத்​துவ சங்​கத்​தின் அகில இந்​திய மருத்​துவ மாநாடு குஜ​ராத்​தின் ஷேலா நகரில் நடை​பெற்​றது. இதில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது:

நாட்​டில் மலேரியா பாதிப்பு 97 சதவீதம் குறைந்​துள்​ளது. இது விரை​வில் ஒழிக்​கப்​படும். இதற்​காக ஆயுஷ்​மான் பாரத் மற்​றும் இந்​திரா தனுஷ் போன்ற திட்​டங்​களுக்கு நன்​றி. டெங்​கு​வால் ஏற்​படும் இறப்​பும் ஒரு சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. பிரசவ மரணம் 25 சதவீதம் குறைந்​துள்​ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சுகா​தார பட்​ஜெட் ரூ.37,000 கோடி​யாக இருந்​தது. இது தற்​போது ரூ.1.28 லட்​சம் கோடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. 2047-ம் ஆண்டு வளர்ச்​சி​யடைந்த பாரதம் என்ற பிரதமரின் தொலைநோக்கை நனவாக்க ஆரோக்​கிய​மான மக்​கள் தொகை அவசி​யம். இதற்கு மருத்​து​வர்​கள் மற்​றும் இந்​திய மருத்​துவ சங்​கத்​தின் பங்கு மிக முக்​கி​யம். ஆரோக்​கிய​மான மக்​கள் தேவை என்​ப​தற்​காகத்​தான் தூய்மை இந்​தியா, ஆயுஷ்​மான் பாரத், ஃபிட் இந்​தியா இயக்​கம், கேலோ இந்​தியா போன்ற திட்​டங்​கள் கொண்​டு​வரப்​பட்​டன.

பொது மருந்​துகளுக்​கான ஜிஎஸ்டி நீக்​கப்​பட்​டுள்​ள​தால், தற்​போது அவை குறை​வான விலை​யில் கிடைக்​கின்​றன. நாடு முழு​வதும் எய்ம்ஸ் மருத்​து​வ​மனையை விரிவுபடுத்தி வரு​கிறோம். வீடியோகி​ராபி மூலம் ஆரம்ப சுகா​தார மையங்​களுக்கு எய்ம்ஸ் மூலம் வழி​காட்​டும் திட்​டத்தை தொடங்​க​வுள்​ளோம்.

மக்​களுக்கு தரமான மருத்​துவ சிகிச்சை குறைந்த செல​வில் கிடைக்​கும் வகை​யில், இந்​திய மருத்​துவ சங்​கத்​தின் பங்​களிப்பு மற்​றும் பணி​கள் இருக்க வேண்​டும்.

ஆயுஷ்​மான் பாரத் திட்​டம் மற்​றும் மலிவு விலை மருந்​துகளை சில மருத்​து​வர்​கள் அலட்​சி​யப்​படுத்த முயற்​சிக்​கின்​றனர். இது நிறுத்​தப்பட வேண்​டும். சுகா​தா​ரத் ​துறை​யில் வெற்​றிடத்தை போக்க இந்த திட்​டங்​கள் அவசி​ய​மானது. இவ்​வாறு அமித்​ ஷா கூறி​னார்​.

SCROLL FOR NEXT