புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு (79) கடந்த 5-ம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர் அரூப் பாசு தலைமையிலான மருத்துவர்கள், சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து சர் கங்கா ராம் மருத்துவமனை டீன் அஜய் ஸ்வரப் கூறும்போது, “மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருந்துகள் நல்ல பலனை அளித்தன. ஞாயிற்றுக்கிழமை சோனியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவித்தார்.