இந்தியா

ரோஹிங்கியா ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வேண்டுமா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டவிரோதமாக இந்​தி​யா​வில் ஊடுரு​வி​யுள்ள ரோஹிங்​கியா ஊடு​ரு​வல்​காரர்​களுக்கு இந்​தியா சிவப்புக் கம்​பளம் விரித்து வரவேற்பு அளிக்க வேண்​டுமா என உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர்.

சட்​ட​விரோத​மாக தங்​கி​யுள்​ள​தாக டெல்லி காவல் ​துறை​யின​ரால் அழைத்துச் செல்​லப்​பட்ட ரோஹிங்​கி​யாக்​களை விடுவிக்​கக் கோரு​வது தொடர்​பான ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்​வில் நேற்று நடந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், ரோஹிங்​கி​யாக்​களை இந்​திய அரசு அகதி​களாக அறி​வித்​துள்​ள​தா, அவர்​கள் இந்​தி​யா​வில் தங்க சட்​டப்​பூர்​வ​மான அனு​மதி உள்​ளதா என்று கேள்வி எழுப்​பினர்.

மேலும் ரோஹிங்​கியா ஊடு​ரு​வல்​காரர்​களுக்கு இந்​தி​யா​வில் சிவப்புக் கம்​பளம் விரித்து வரவேற்பு அளிக்க வேண்​டுமா என்று கண்​டிப்​புடன் கேள்வி எழுப்​பினர். பின்னர் இந்த வழக்​கின் விசா​ரணை தள்ளி வைக்​கப்​பட்​டது.

ஏற்​கெனவே இலங்கை அகதி​கள் விவ​காரத்​தில் இந்​தியா ஒன்​றும் சத்​திரம் கிடை​யாது என உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​திருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT