இந்தியா

19 பெண்களை தீவிரவாதிகளாக்கிய ஷாகின்: டெல்லி குண்டுவெடிப்புக்கு பின் அனைவரும் மாயம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம் நாட்​டையே உலுக்​கியது. 13 பேர் உயி​ரிழந்த இந்த வழக்கை என்​ஐஏ, டெல்லி காவல்​துறை​யின் சிறப்பு பிரிவு உள்​ளிட்ட விசா​ரணை அமைப்​பு​கள் இணைந்து விசா​ரித்து வரு​கின்​றன.

வெடி பொருள் ​வழக்​கில் கைது செய்​யப்பட்​டவர்களில் ஒரு​வ​ரான லக்​னோவை சேர்ந்த பெண் மருத்​துவர் ஷாகின் ஷாகித்துக்கு டெல்லி குண்டுவெடிப்பு வழக்​கில் தொடர்​பிருப்​பது தெரிய​வந்​தது. ஜெய்​ஷ்-இ-முகமது தீவிர​வாத அமைப்​பின் மகளிர் பிரிவுக்​கான இந்​தி​யத் தலை​வ​ராக ஷாகின் செயல்​பட்டு வந்​துள்​ளார்.

மேடம் சர்​ஜன் என்று அழைக்​கப்​படும் இவர், தங்​கள் அமைப்​புக்கு ஆட்​கள் சேர்ப்​ப​தில் முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளார். சமூகத்​தில் தனக்குள்ள அந்​தஸ்து மற்​றும் செல்​வாக்கை பயன்​படுத்தி அப்​பாவி பெண்​கள் மற்​றும் சிறுமிகளை மூளைச் சலவை செய்​துள்​ளார். விவாகரத்து செய்​யப்​பட்ட பெண்​கள், 14 - 18 வயதுடைய சிறுமிகளை இவர் இலக்காக வைத்து செயல்​பட்​டுள்​ளார். எளி​தில் உணர்ச்​சிவசப்​படக் கூடிய​வர்​கள் என்​ப​தா​லும் கையாள்​வது எளிது என்​ப​தா​லும் இவர்​களை தேர்வு செய்​துள்​ளார்.

இதன் மூலம் 19 பெண்​களை இவர் தீவிரவாதப்​பாதைக்கு அழைத்து வந்​துள்​ளதை விசா​ரணை அதி​காரி​கள் உறுதி செய்​துள்​னர். இந்​நிலை​யில் அந்த 19 பெண்​களை​யும் இப்​போது காண​வில்​லை.

மேலும் இவரது வாட்ஸ் அப் உரை​யாடல்​கள், தற்​கொலைப் படைக்​கான விரி​வான திட்​டங்​கள், ‘மு​ஜாகித் ஜங்​ஜு’ என்ற ரகசிய பெயரில் வெடி பொருட்​கள் தொடர்​பான உத்​தர​வு​கள், ஆள்​சேர்ப்பு உத்​தி​கள் என பலவற்​றை வெளிப்​படுத்​தி​யுள்​ளன.

SCROLL FOR NEXT