சஞ்சய் ராவத்

 
இந்தியா

உத்தவ் சிவசேனாவின் ஒரு எம்.பி.க்கு ரூ.50 கோடி பேரம்? - கட்சி நிர்வாகிகளுக்கு சஞ்சய் ராவத் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (யுபிடி) கட்​சி​யில் உள்ள எம்​.பி., எம்எல்​ஏ.க்​களை தங்​கள் பக்​கம் இழுக்க மகா​ராஷ்டிர துணை முதல்வர் ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனா கட்சி கடந்த சில வாரங்​களாக முயன்று வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யாகின.

சிவசேனா கட்​சி​யின் (உத்​தவ்) எம்​எல்​ஏ.க்​களில் 16 பேரும், எம்.பி.க்களில் 7 பேரும் துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டேவுடன் தொடர்​பில் இருப்​ப​தாக​வும், வரும் நாடாளு​மன்ற மழைக்காலக் கூட்​டத் தொடருக்கு முன்​பாக அவர்​கள் சிவசே​னா​வில் இணையக்கூடும் என்​றும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. சிவசேனா​வின் (ஏக்​நாத் ஷிண்​டே) இந்த நடவடிக்​கை, ஆபரேஷன் டைகர் என அழைக்​கப்​படு​கிறது.

இதனிடையே, கடந்த 14ம் தேதி முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்கரே கூட்​டிய அவசர ஆலோ​சனைக் கூட்​டத்​தில் மொத்தமுள்ள 9 மக்​களவை உறுப்​பினர்​களில் 5 பேர் கலந்து கொள்​ள​வில்லை எனக் கூறப்​படு​கிறது. இந்​தச் சூழ்​நிலை​யில், சிவசேனா (உத்​தவ்) எம்​.பி.க்​கள் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோ​ருடன் இணைந்து சஞ்​சய் ராவத் டெல்​லி​யில் செய்தியாளர்​களைச் சந்​தித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: சிவசேனா எம்​.பி.க்​கள், எம்எல்ஏ.க்கள் யாரேனும் கட்​சியை விட்டு வெளியே செல்ல விரும்பி​னால் அவர்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு செல்லட்​டும். எங்​கள் கட்​சி​யின் எம்​.பி.க்​கள் குறித்து இது​போன்ற செய்​தி​கள் தற்​போது வரு​கின்​றன. இதற்கு அவர்​கள் விளக்​கம் அளிக்க வேண்​டும். இந்த எம்​.பி.க்​களின் வெற்​றிக்​காக எங்​கள் கட்சித் தலை​வர் உத்​தவ் தாக்​கரே ஓய்​வின்றி உழைத்​துள்​ளார். நாங்​கள் அவர்​களை சும்மா விட மாட்​டோம்.

கட்சி மாறும் எம்​.பி.க்​களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. மேலும், எம்​.பி.க்​கள் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.15 கோடி முன்​பண​மாகக் கொடுக்​கப்​பட்​டுள்​ள​தாக எனக்கு தகவல் கிடைத்​துள்​ளது. குறைந்​தது அவர்​களுக்கு ரூ.50 கோடி கொடுக்கப்படும் என அவர்​களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்​படு​கிறது. மேலும் அவர்​களை அழைத்​துச் செல்ல 3 தனி விமானங்​களும் ஏற்​பாடு செய்யப்பட்டுள்​ளன.

இந்த உத்​தர​வாதத்தை அடுத்தே அவர்​கள் நான்​டெட், புனே உட்பட 3 இடங்​களில் இருந்து தனி விமானம் மூலம் சென்​றுள்​ளனர். இவர்கள் ரூ.50 ஆயிரத்​துக்​குக் கூட தகு​தி​யானவர்​கள் கிடை​யாது. சிவசேனா கட்சி என்ற பெயர் காரண​மாகவே இவர்​களுக்கு இவ்வளவு மதிப்​பு. எங்​கள் கட்சி சார்​பில் கொறடா உத்​தரவு பிறப்பிக்​கப் ​பட்​டுள்​ளது. நாடாளு​மன்​றக் கட்​சிக் குழுக் கூட்டத்தை நாளை கூட்​டி​யுள்​ளோம். இந்​தக் கூட்​டத்​தில் பங்கேற்காத எம்​.பி.க்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். எங்​கள் கட்​சி​யின் கொறடா அரவிந்த் சாவந்த் இது தொடர்​பாக மக்​களவை சபா​நாயகருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT