இந்தியா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிச.4-ல் இந்தியா வருகை: இருதரப்பு மாநாட்​டில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் அரசு​முறைப் பயண​மாக டிசம்​பர் 4-ம் தேதி இந்​தியா வரு​கிறார்.

‘ரஷ்​யா​விடம் வேறு நாடு​கள் கச்சா எண்​ணெய் வாங்க கூடாது. அந்​தப் பணத்​தில்​தான் உக்​ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரு​கிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரு​கிறார். மேலும், ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தியா மீது கூடு​தலாக 25 சதவீத வர்த்தக வரியை​யும் ட்ரம்ப் அறி​வித்​தார். இந்த நிலை​யில், வர்த்தக வரி ஒப்​பந்​தம் குறித்து இந்​தியா - அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது.

இந்த சூழ்​நிலை​யில், பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டிசம்​பர் 4, 5-ம் தேதிகளில் இந்​தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்​கிறார். இத்தகவலை மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் நேற்று உறு​திப்​படுத்​தி​யது.

ஏற்​கெனவே திட்​ட​மிட்​டபடி இந்​தியா- ரஷ்யா இடையி​லான 23-வது ஆண்டு மாநாட்​டில் புதின் பங்​கேற்று உரை​யாற்​றுகிறார். அத்​துடன் டிசம்​பர் 5-ம் தேதி பிரதமர் மோடி​யுடன் நேரடி​யாக பல்​வேறு முக்​கிய விஷ​யங்​கள் குறித்து புதின் ஆலோ​சனை நடத்​துகிறார்.

இந்​தியா வரும் அதிபர் புதினுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு சிறப்​பான வரவேற்பு அளிக்​கிறார். குடியரசுத் தலை​வர் மாளி​கையில் புதினுக்கு சிறப்பு விருந்​தும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. புதினின் இந்த வரு​கை, இந்​திய - ரஷ்யா உறவை மேலும் வலுப்​படுத்​தும் வகை​யில் இருக்​கும் என்று மத்​திய வெளியுறவு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT