ஆராதனா தாஸ்

 
இந்தியா

ஒடிசா பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது ரூ.95 லட்சம் மோசடி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புவனேசுவரம்: ஒடிசா பெண் ஐஏஎஸ் அதி​காரி ஒரு​வர், ரூ.95 லட்​சம் மோசடி செய்​துள்​ள​தாகப் புகார் எழுந்​துள்​ளது. ஒடிசா மாநில உள்​துறை கூடு​தல் செயல​ராக பணி​யாற்றி வருபவர் ஆராதனா தாஸ்.

இவர் கட்​டாக் மாவட்​டத்​தைச் சேர்ந்த கமல் குமார் பவ்​சிங்கா என்ற மாற்​றுத் ​திற​னாளி​யிடம், கட்​டாக் மேம்​பாட்டு ஆணைய பகுதி​யில் நிலம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.95 லட்​சம் பணம் வாங்​கிய​தாக கூறப்​படு​கிறது. ஆனால், நீண்ட நாட்​களாகி​யும் நிலம் வாங்​கித் தராமலும், வாங்​கிய பணத்​தைத் திருப்​பித்தராமலும் ஆராதனா காலம் கடத்தி வந்​துள்​ளார். இதையடுத்து கட்​டாக் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்கப்பட்டது. முதற்​கட்ட விசா​ரணை​யில், ரூ.95 லட்​சம் பணப் பரிவர்த்​தனை நடை​பெற்​றது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

          

கொலை மிரட்​டல்: பணத்​தைத் திருப்​பிக் கேட்​டபோது கமல் குமாரை, ஆராதனா தாஸ் தரக்​குறை​வாகப் பேசி​யதோடு, அவருக்குக் கொலை மிரட்​டலும் விடுத்​ததாகப் புகார் கொடுக்கப்பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் ஆராதனா தாஸ் விசாரணைக்​குச் சரி வர ஒத்​துழைக்​க​வில்லை என்று காவல்துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அவர் இந்​திய ஆட்​சிப் பணி அதி​காரி என்​ப​தால், அவர் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்க அனு​மதி கோரி, மாநில உள்துறை, பொது நிர்​வாகத் துறைக்கு காவல் ஆணை​யரகம் கடிதம் எழு​தி​யுள்​ளது. உயர்​மட்ட அரசு அதி​காரி ஒரு​வர் மீது எழுந்துள்ள இந்த மோசடிப் புகார் ஒடிசா அரசு வட்​டாரத்​தில்​ பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT