இந்தியா

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ரூ.10,000 கோடி சைபர் மோசடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டில் நடை​பெற்ற நிதி மோசடிகள் குறித்து தேசிய சைபர் குற்​றம் இணை​ய தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

நாட்​டில் கடந்த 6 ஆண்​டு​களில் நடை​பெற்ற பல்​வேறு மோசடிகள் மூலம் இந்​தி​யர்​கள் ரூ.52,976 கோடியை இழந்​தனர். கவர்ச்​சிகர​மான முதலீட்டு திட்​டம், டிஜிட்​டல் கைது, ஆன்​லைன் மோசடி, வங்​கி​களின் பெயர்​களில் நடந்த மோசடி, சைபர் குற்​றங்​கள் மூலம் இந்த மோசடிகள் நடை​பெற்​றன.

கடந்​தாண்​டில் மட்​டும் ரூ.19,812 கோடியை இந்​தி​யர்​கள் இழந்​தனர். கடந்த 2024-ம் ஆண்​டில் சுமார் ரூ.23 கோடி, 2023-ல் ரூ.7 ஆயிரம் கோடி, 2002-ல் ரூ.2 ஆயிரம் கோடி, 2021-ல் ரூ.552 கோடி, 2020-ல் ரூ.9 கோடியை​யும் இந்​திய மக்​கள் இழந்​தனர்.

கடந்​தாண்​டில் மகா​ராஷ்டிரா வில் சைபர் மோசடி புகார்கள் அதி​கள​வில் பதி​வா​யின. இங்கு ரூ.3,203 கோடியை மக்கள் இழந்துள்​ளனர். அடுத்​த​தாக கர்​நாடகா ரூ.2,413 கோடி, தமிழகம் ரூ.1,897 கோடி, உ.பி. ரூ.1,443 கோடி, தெலங்​கானா ரூ.1,372 கோடி என மொத்தம் ரூ.10,000 கோடிக்கு மேல் இழந்​துள்​ளது.

நாட்​டில் நடை​பெற்ற மொத்த மோசடி​யில், இந்த 5 மாநிலங்​களில்​தான் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட மோசடிகள் நடை​பெற்​றுள்​ளன. குஜ​ராத் ரூ.1.312 கோடி, டெல்லி ரூ.1,163 கோடி, மேற்கு வங்​கம் ரூ.1073 கோடியை இழந்​துள்​ளது. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT