இந்தியா

மேற்குவங்கத்தின் 15 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல்: திரிணமூல்-பாஜக தொண்டர்கள் மோதல்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தின் 15 வாக்​குச் சாவடிகளில் நேற்று மறு​தேர்​தல் நடை​பெற்​றது. அப்​போது ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக தொண்​டர்​களிடையே மிகப்​பெரிய அளவில் மோதல் ஏற்​பட்​டது. மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் தடியடி நடத்தி கூட்டத்​தைக் கலைத்​தனர்.

மேற்கு வங்​கத்​தில் கடந்த 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. கடந்த 29-ம் தேதி நடை​பெற்ற இறு​திக் கட்ட தேர்​தலின் போது மகரஹட் பஸ்​சிம் மற்​றும் டைமண்ட் ஹார்​பர் தொகு​தி​களின் 15 வாக்​குச் சாவடிகளில் பல்​வேறு முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக புகார்​கள் எழுந்​தன.

இதைத் தொடர்ந்து மகரஹாட் பஸ்​சிம் தொகு​திக்கு உட்​பட்ட 11 வாக்​குச் சாவடிகள், டைமண்ட் ஹார்​பர் தொகு​திக்கு உட்​பட்ட 4 வாக்​குச் சாவடிகளில் நேற்று மறு தேர்​தல் நடை​பெற்​றது. காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கியது. பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து வாக்​களித்​தனர். மகரஹாட் பஸ்​சிம் தொகு​தி​யின் மறு​வாக்​குப் பதி​வினை பார்​வை​யிட பாஜக வேட்​பாளர் கவுர் சுந்​தர் கோஸ் சென்​றார். ஏர்​பூர் பகு​தி​யில் அவரை திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​கள் சூழ்ந்து கோஷமிட்​டனர். இதனால் அங்கு பெரும் பதற்​றம் ஏற்​பட்​டது.

டைமண்ட் ஹார்​பர் தொகு​திக்கு உட்​பட்ட பால்டா பகு​தி​யில் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக தொண்​டர்​கள் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. கூட்​டத்​தைக் கலைக்க பாது​காப்​புப் படை வீரர்​கள் தடியடி நடத்​தினர். இதில் பலர் காயம் அடைந்​தனர். சிலர் மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​களின் பலத்த பாது​காப்பு 15 வாக்​குச் சாவடிகளில் அமை​தி​யாக வாக்​குப் பதிவு நடை​பெற்​றது.

பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி கூறும்​போது, “பல்​வேறு வாக்​குச் சாவடிகளில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸார் முறை​கேடு​களில் ஈடு​பட்​டனர். இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​திடம் புகார் மனுக்​கள் அளிக்​கப்​பட்​டன. எனினும் 15 வாக்​குச் சாவடிகளில் மட்​டுமே மறு​தேர்​தல் நடை​பெறுகிறது. கூடு​தல் வாக்​குச் சாவடிகளில் மறு தேர்​தல் நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

திரிண​மூல் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி பன்ஜா கூறும்​போது, “பாஜக​வின் அழுத்​தத்​தால் 15 வாக்​குச் சாவடிகளில் மறு​வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது’’ என்று தெரி​வித்​தார்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 15 வாக்​குச் சாவடிகளி​லும் விறு​விறுப்​பாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இந்​த வாக்​குச்​சாவடிகளில்​ 80 சதவீத வாக்​கு​கள்​ பதி​வாகின.

திரிணமூல் காங்கிரஸார் மிரட்டுவதாக புகார்: சவுத் 24 பர்​கா​னாஸ் மாவட்​டம், பால்டா பகு​தியை சேர்ந்த மக்​கள் நேற்று சாலை​யில் திரண்டு திடீர் போராட்​டம் நடத்​தினர். அப்​போது ஒரு பெண் கூறும்​போது, “திரிண​மூல் காங்​கிரஸார் எங்​கள் வீடு​களுக்கு வந்து மிரட்​டல் விடுக்​கின்​றனர். எங்​கள் பகு​தி​களுக்கு மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் பாது​காப்பு அளிக்க வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

மற்​றொரு பெண் கூறும்​போது, “திரிண​மூல் காங்​கிரஸை சேர்ந்த இஸ்​ரபீல், சுஜா​திதீன் ஷேக் ஆகியோர் எங்​கள் பகுதி மக்​களை மிரட்​டு​கின்​றனர். அவர்​களால் பெண்​களுக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டிருக்​கிறது’’ என்று குற்​றம் சாட்​டி​னார்.

இதுகுறித்து தேர்​தல் ஆணைய வட்​டாரங்​கள் கூறும்​போது, “பால்டா பகு​தி​யில் சிலர் பொது​மக்​களுக்கு மிரட்​டல் விடுத்​த​தாக புகார்​கள் வந்​துள்​ளன. அவர்​களை கைது செய்ய உத்​தர​விடப்​பட்டு உள்​ளது’’ என்று தெரி​வித்​தன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக பால்டா பகு​தி​யில் மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் குவிக்​கப்​பட்​டு உள்​ளனர்​.

SCROLL FOR NEXT