இந்தியா

தேர்வு முறைகளில் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் குழு அமைப்பு - மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்​தும் தேர்​வு​கள் உள்​ளிட்ட அனைத்​துப் பொதுத் தேர்வு முறை​களி​லும் சீர்திருத்தங்களை மேற்​கொள்​வதற்​காக, இன்ஃ​போசிஸ் நிறுவனத்தின் இணை நிறு​வன​ரான நந்தன் நிலேகனி தலைமையில் உயர் அதி​காரப் பணிக்​குழுவை மத்​திய அரசு நேற்று அமைத்துள்ளது.

நீட் தேர்​வில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாகக் கூறி டெல்லி ஜந்​தர் மந்​தர் உள்​ளிட்ட நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் மாணவர்​கள் தொடர்ந்து 36 நாட்​கள் போ​ராட்​டம் நடத்​தினர். அதன் விளை​வாக, அப்​போதைய மத்​தி​யக் கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கி​னார்.

அதைத் தொடர்ந்​து, தேர்வு அமைப்​பில் கட்​டமைப்பு மற்​றும் தொழில்​நுட்ப ரீதியி​லான மாற்​றங்​களைக் கொண்​டுவர நிலேகனி தலை​மை​யில் 6 உறுப்​பினர்​கள் கொண்ட பணிக்​குழு அமைக்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி கடந்த மாதம் உறுதி அளித்​திருந்​தார்.

இந்த நிலை​யில் நிலேகனி தலை​மை​யில் உயர் அதி​காரி பணிக்​குழுவை அமைத்து மத்​திய அரசு நேற்று உத்​தர​விட்​டுள்​ளது. இந்தப் பணிக்​குழு​வில், இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்​ரோ) முன்​னாள் தலை​வர் எஸ்​.சோம​நாத், புலனாய்வு அமைப்​பின் முன்​னாள் இயக்​குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்​குநர் வி.​காமகோடி, முன்​னாள் கல்​விச் செய​லா​ளர் அனிதா கர்​வால் மற்​றும் தளவாடப் போக்​கு​வரத்து வல்​லுநர் அம்​ரித் லால் மீனா ஆகியோர் உறுப்​பினர்​களாக இடம்​பெற்​றுள்​ளனர்.

தேர்வு சீர்​திருத்​தங்​கள் தொடர்​பாக மாணவர்​கள், பெற்​றோர்​கள், ஆசிரியர்​கள், கல்வி நிறு​வனங்​கள், தேர்வு நடத்​தும் அமைப்​பு​கள், தொழில்​முறை வல்​லுநர்​கள் மற்​றும் சமூக ஆர்​வலர்​களிட​மிருந்து யோசனை​களை​யும் ஆலோ​சனை​களை​யும் பணிக்​குழு வரவேற்றுள்​ளது. இதற்​கான கருத்​துகளைச் செப்​டம்​பர் 13-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும் என்​று கோரப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT