புதுடெல்லி: நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.5 லட்சம் வரை உயர் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 43 கோடி பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்து தனது 172-வது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.