இந்தியா

ராமர் கோயிலில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் விமர்சனம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்​கைப் பணம் திருடப்​படு​வ​தாக துறவி​கள், அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் புகார் தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், ராமர் கோயில் காணிக்கை பணம் எண்​ணும் குழு உறுப்​பினர் மஹி​பால் சிங், பல குற்​றச்​சாட்​டு​களை வீடியோ​வாக வெளி​யிட்​டுள்​ளார். அதில், ‘‘ராமர் கோயிலில் பணம் எண்​ணும் போது பெட்​டி​யில் 10 கட்​டு​கள் இருப்​ப​தாக ஆவணத்​தில் குறிப்பிடப்​படு​கிறது. ஆனால், வங்கி ஊழியர்​கள் உண்​மை​யில் 13 கட்​டு​களைப் பெட்​டி​யில் வைத்​திருந்​தனர். இந்த முரண்​பாட்டை உணர்ந்​து, பெட்​டி​யில் இருந்த கட்​டு​களைச் சரி பார்த்த போது 10 இருக்க வேண்​டிய இடத்​தில் 13 பணக்​கட்​டு​கள் இருந்​தன.

இது எவ்​வளவு கால​மாக நடை​பெறுகிறது என்​பதை விசா​ரிக்க, ராமர் கோயில் அறக்​கட்​டளை நிர்​வாகி​களுக்​குத் தகவல் தெரி​வித்​தேன். பின்​னர், நன்​கொடைகளைச் சரி பார்த்து எண்​ணுவதற்​காக மேலும் 2 பேர் நியமிக்​கப்​பட்​டனர். அதன் பிறகும் குறை​கள் சரிசெய்​யப்​பட​வில்​லை. ஆனால், என்​னைப் பணி​யில் இருந்து நீக்​கி​விட்​டனர்’’ என்று கூறி​யுள்​ளார்.

இந்த வீடியோவை தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் இணைத்து சமாஜ்​வாதி எம்​.பி. அகிலேஷ் வெளி​யிட்ட பதி​வில், ‘‘இன்று உலகம் அறிந்து கொண்ட இந்​தச் செய்​தி, உண்​மை​யில் மிக​வும் பழையது.

‘ட்​ரஸ்ட்’ (அறக்​கட்​டளை) என்​றால் நம்​பிக்​கை. இந்த விவ​காரத்தை அறக்​கட்​டளையே தீவிர​மாக எடுத்​துக் கொண்​டு, நீதித் துறை விசா​ரணைக்கு வலி​யுறுத்த வேண்​டும். குற்​ற​வாளி​களைத் தண்​டிக்க வேண்​டும். அரசு ஏன் மவுனம் காக்​கிறது? விசா​ரணை கோரிக்​கை​யைக் கண்டு முக்​கியப் புள்​ளி​கள் அஞ்​சுகிறார்​களா?’’ என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

ராமர் கோயில் வளாகத்​தில் உள்ள 15 கோயில்​களில் 44 காணிக்கை பெட்​டிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. தவிர, அறக்​கட்​டளை​யின் 2 அலு​வல​கங்​களி​லும் நன்​கொடை வசூலித்து ரசீதுகள் வழங்​கப்​படு​கின்​றன.

SCROLL FOR NEXT