இந்தியா

ரக்‌ஷா பந்தன் கோலாகலம்: பிரதமர் மோடி, ராகுல், முதல்வர் யோகி ராக்கி கட்டும் படங்கள் வைரல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: வட​மாநிலங்​களில் நேற்று ரக்‌ஷா பந்தன் விமரிசையாகக் கொண்​டாடப்​பட்​டது. தங்​களுக்கு ராக்கி கட்டியவர்​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி, உபி முதல்​வர் யோகி ஆதித்யநாத் மற்​றும் காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி​யின் படங்கள் சமூக வலை​தளங்​களில் வைரலா​யின.

வடமாநிலங்​களில் பிரபல​மான பண்​டிகை​களில் ஒன்​றாக ரக் ஷா பந்​தன் விளங்​கு​கிறது. சகோ​தரப் பாசத்தை வெளிப்​படுத்​தும் இந்நாளில் சகோ​தரர்​களைத் தேடி சகோ​தரி​கள் நேரில் சென்று அவர்​களது கைகளில் ராக்கி கயிறு கட்டி மகிழ்​வது உண்​டு. இதற்காக, அவர்​கள் வீட்டை விட்டு கிளம்பி சகோ​தரர்​கள் வீடுகளை அடைய வடமாநில அரசுகள் இலவச பேருந்து சேவையை இயக்​கின. உபி​யில் நேற்று முதல் 3 நாட்​களும் மற்​றும் டெல்​லி, பிஹார், ராஜஸ்​தான் உள்​ளிட்ட மாநிலங்​களில் 2 நாட்களுக்கு இலவசப் பயணம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பயணத்​தில் ஒவ்​வொரு பெண்​ணும் தன்​னுடன் உதவிக்​காக யாராவது ஒரு​வரை அழைத்​துச் செல்​லாம். இதன் காரண​மாக, டெல்​லியி​லிருந்து மீரட் செல்​லும் விரைவு சாலை மற்​றும் அதன் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் பெண்​கள் கூட்​டம் குவிந்​த​தால் நெரிசலும், போக்​கு​வரத்து பாதிப்​பும் ஏற்​பட்​டது.

உபி​யின் பரேலி​யில் பாஜக​வின் நகர மேயர் டாக்​டர் உமேஷ் கவுதம், 20,000 பெண்​களுக்கு இலவச சேலைக்​கான அறி​விப்பை வெளி​யிட்​டிருந்​தார். இதை பெறக் குவிந்த கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு ஒரு பெண் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

இந்த ரக் ஷா பந்​தனில் ஒவ்​வொரு வருட​மும் பெண்​கள் முக்​கிய தலை​வர்​களைச் சந்​தித்து ராக்கி கட்​டு​வது உண்​டு. இதன்​படி, பிரதமர் நரேந்​திரமோடி, உபி முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் மற்றும் காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி ஆகியோ​ருக்கு பெண்கள், பள்ளி மாணவர்​கள் ராக்கி கட்​டும் படங்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

இவற்​றைப் பகிர்ந்த பிரதமர் மோடி ‘எண்​.7, லோக் கல்​யாண் மார்க்​கில் (பிரதமர் இல்​லம்) நடை​பெற்ற ரக் ஷா பந்​தன் கொண்டாட்​டங்​கள் மறக்க முடி​யாத தருணங்​கள். இத்​திரு​விழா அன்பு மற்​றும் நல்​லிணக்​கத்​தின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தட்​டும். இது அனை​வருக்​கும் மகிழ்ச்​சி​யை​யும், செழிப்பை​யும் கொண்டு வரட்​டும்’ எனத் தெரி​வித்​துள்​ளார்.

இந்த ஆண்டு விற்​பனை செய்​யப்​படும் ராக்கி கயிறுகளில் தற்​போதைய நிகழ்​வு​களுக்கு ஏற்ற வகை​யில் முக்​கி​யத்​து​வம் பெற்றுள்​ளது. அந்த வகை​யில், மத்​திய, மாநில அரசுகளின் பெண்களுக்​கான திட்​டங்​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன. இத்​துடன் வழக்​க​மான வகை​யில் பாலிவுட் நட்​சத்​திரங்​கள், கார்டூன் சித்​திரங்​கள் உள்​ளிட்ட படங்​களு​ட​னும் ராக்கி கயிறுகள் விற்​பனை​யாகின்​றன. வடமாநிலங்​களில் இந்த ஆண்டு ராக்கி விற்​பனை ரூ.30 ஆயிரம்​ கோடியைத்​ தாண்​டும்​ என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT