இந்தியா

தலைமை தகவல் ஆணையராக ராஜ்குமார் கோயல் பதவியேற்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைமை தகவல் ஆணை​ய​ராக முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி ராஜ்கு​மார் கோயல் நேற்று பதவி​யேற்​றார்.

தலைமை தகவல் ஆணை​ய​ராக இருந்த ஹீராலால் சமாரி​யா​வின் பதவிக் காலம் கடந்த செப்​டம்​பர் 13-ம் தேதி முடிவடைந்​தது. இதையடுத்து பிரதமர் நரேந்​திர மோடி, மத்திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு ஆலோ​சனை நடத்தியது. இ​தில் அந்​தப் பதவிக்கு ராஜ்கு​மார் கோயல் தேர்வு செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் புதிய தலைமை தகவல் ஆணை​ய​ராக ராஜ்கு​மார் கோயல் நேற்று பதவி​யேற்​றார். அவருக்கு குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், மத்​திய பணியாளர் துறை இணை​யமைச்​சர் ஜிதேந்​திர சிங் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்.

ராஜ்கு​மார் கோயல், 1990-ம் ஆண்டு பேட்ச் அருணாச்சல பிரதேசம்- கோவா- மிசோரம்- யூனியன் பிரதேசங்​கள் பிரிவை சேர்ந்த ஓய்​வு​பெற்ற ஐஏஎஸ் அதி​காரி ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, சட்​டம் மற்​றும் நீதி அமைச்​சகத்​தில் நீதித்துறை​யின் செய​லா​ள​ராகப் பணி​யாற்றி ஓய்வு பெற்​றார்.

பிரதமர் மோடி தலை​மையி​லான குழு மத்​திய தகவல் ஆணையத்தின் 8 தகவல் ஆணை​யர்​களின் பெயர்​களை​யும் பரிந்துரை செய்​துள்​ளது. இதனால் 9 ஆண்​டு​களுக்கு பிறகு மத்திய தகவல் ஆணை​யம் முழு பலத்​துடன் செயல்பட உள்​ளது.

SCROLL FOR NEXT