இந்தியா

பிரபல எழுத்தாளர் லீலாவதிக்கு பிரியதர்ஷினி இலக்கிய விருதை வழங்கினார் ராகுல்

செய்திப்பிரிவு

கொச்சி: பிரபல எழுத்​தாளர் லீலா​வ​திக்கு பிரி​யதர்ஷினி இலக்கிய விருதை மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி நேற்று வழங்​கி​னார்.

கேரள காங்​கிரஸ் கமிட்​டி​யின் பிரியதர்​ஷினி பதிப்​பகம், முன்னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் நினை​வாக பிரியதர்ஷினி இலக்​கிய விருதை சமீபத்​தில் உரு​வாக்​கியது. இலக்​கி​யத்​தில் சிறந்த பங்​களிப்பை அளித்​தவர்​களுக்கு இந்த விருது வழங்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த விருதை கேரளாவைச் சேர்ந்த பிரபல எழுத்​தாளர் லீலா​வ​திக்கு (98), கொச்சி​யில் நடை​பெற்ற விழா​வில் மக்​களவை எதிர்க்​கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று வழங்​கி​னார்.

இலக்​கிய பணி​களுக்​காக சாகித்​திய அகாடமி உட்பட பல விருதுகளை லீலா​வதி வென்​றுள்​ளார். குரு​வாயூரில் பிறந்த இவர் தற்​போது எர்​ணாகுளம் மாவட்​டத்​தில் உள்ள திரிக்​ககரா பகு​தி​யில் வசிக்​கிறார்.

இந்​நிகழ்ச்​சி​யில் பேசிய ராகுல் காந்தி கூறிய​தாவது: எழுத்​தாளர் லீலா​வதி கேரளா​வுக்கு மட்​டும் அல்ல, ஒட்​டுமொத்த நாட்​டுக்​கும் முன்​மா​திரி​யாக திகழ்​கிறார். அவர் இந்த வயதி​லும் அதி​காலை 3 மணிக்கே எழுந்து எழுது​வதும், வாசிப்​பதும் ஊக்​கு​விப்​பாக உள்ளது. அமைதி கலாச்​சா​ரம் குறித்து அவர் தெரி​வித்த கருத்துக்கள் என்னை கவர்ந்​தன.

மக்​கள் தங்​கள் கருத்​துக்​களைத் தைரிய​மாக வெளிப்​படுத்​து​வதன் மூலமே சிறந்த நாடு​கள் உரு​வாகின்​றன. மவுன கலாச்சாரம் என்​பது வெறும் பேராசை​யி​னால் உரு​வானது. இது அபாயகர​மானது. லீலா​வதி எளிமை​யானவர். கேரளா​வின் உணர்வை நான் அவரிடம் காண்​கிறேன். இவ்​வாறு ராகுல் கூறினார்.

SCROLL FOR NEXT