இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் கார்கேவுக்கு மசாஜ் செய்த ராகுல் காந்தி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டின் முதல் குடியரசுத் தலை​வர் டாக்​டர் ராஜேந்​திர பிர​சாத்​தின் பிறந்​த​நாளை முன்​னிட்டு நாடாளு​மன்ற வளாகத்​தில் உள்ள அவரது படத்​துக்​கு, மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லா, எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே உள்​ளிட்​டோர் மலர் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

இந்​நிகழ்ச்​சிக்​குப் பிறகு ஒரு சுவாரஸ்​ய​மான சம்​பவம் நடந்​தது. இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.

அந்த வீடியோ​வில், காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஓர் இருக்​கை​யில் அமர்​கிறார். அங்கு அவருக்கு பின்​னால் இருந்த ராகுல் காந்தி சாதா​ரண​மாக கார்கே தோளைப் பிடித்து (மசாஜ்) அழுத்​துகிறார். அப்​போது பிரி​யங்கா காந்தி உள்​ளிட்​டோர் அரு​கில் இருந்​தனர்.

இதே நாளில் மற்​றொரு வீடியோ​வும் வேக​மாக வைரலாகி வரு​கிறது. அந்த வீடியோ​வில், நாடாளு​மன்ற வளாகத்​தில் அமர்ந்​திருந்த மாற்​றுத் திற​னாளி பெண் அருகே அமர்ந்த காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி புகைப்​படம் எடுத்​துக் கொள்​கிறார். இந்த செயலை சமூக ஊடக​வாசிகள் பாராட்டி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT