இந்தியா

வாக்கு திருட்டு தேச விரோத செயல் - மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​எஸ்ஐஆர் குறித்து மக்​களவை​யில் நேற்று சிறப்பு விவாதம் தொடங்​கியது. அப்​போது வாக்கு திருட்டு மிகப்​பெரிய தேச விரோத செயல் என்று எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி குற்​றம் சாட்​டி​னார். நாடாளு​மன்ற மக்களவையில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) தொடர்​பான விவாதம் நேற்று தொடங்​கியது.

காங்​கிரஸ் எம்பி மணீஷ் திவாரி விவாதத்தை தொடங்கி வைத்​து பேசும்​போது, “தலை​மைத் தேர்​தல் ஆணை​யரை நியமிக்​கும் குழு​வில் மாநிலங்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர், உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தியை சேர்க்க வேண்டும்.

எஸ்​ஐஆர் பணியை மேற்​கொள்ள சட்​டப்​பூர்​வ​மாக எந்த அனு​ம​தி​யும் இல்​லை. இதனை உடனடி​யாக நிறுத்த வேண்​டும். மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மீதான சந்​தேகங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. எனவே மீண்​டும் வாக்​குச்​சீட்டு முறை​யில் தேர்​தலை நடத்த வேண்​டும்’’ என்று வலி​யுறுத்​தி​னார்.

சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் பேசும்​போது, “காங்​கிரஸ் எம்பி மணீஷ் திவாரி​யின் கருத்​துகளை ஆமோ​திக்​கிறேன். அமெரிக்​கா, ஜெர்​மனி உள்​ளிட்ட நாடு​களில்​கூட வாக்​குச்​சீட்டு முறை​யில் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​தி​யா​விலும் வாக்​குச்​சீட்டு முறை​யில் தேர்​தலை நடத்த வேண்​டும்’’ என்றார்.

பாஜக எம்பி சஞ்​சய் ஜெய்​ஸ்​வால் பேசும்​போது, “கடந்த 1947-ம் ஆண்​டில் முதல்​முறை​யாக வாக்கு திருட்டு நடை​பெற்​றது. அப்​போது ஒட்​டுமொத்த காங்​கிரஸ் கமிட்​டி​யும் சர்​தார் படேலுக்கு ஆதர​வாக இருந்​தது. ஆனால் நேரு பிரதம​ராக நியமிக்​கப்​பட்​டார். இதை​விட பெரிய வாக்கு திருட்டு எது​வுமே இருக்​காது’’ என்றார்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசும்​போது, “பிரதமரும், மத்​திய உள்​துறை அமைச்​சரும் இணைந்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யரை தேர்வு செய்​கின்​றனர். உலகில் வேறு எந்த பிரதமரும் இது​போன்று செயல்​படு​வது கிடை​யாது. அனைத்து அரசு அமைப்​பு​களை​யும் ஆர்​எஸ்​எஸ் கைப்​பற்றி வரு​கிறது’’ என்று குற்​றம் சாட்​டி​னார்.

இதையடுத்து, நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறும்​போது, “எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, தேர்​தல் சீர்​திருத்​தம் தொடர்​பாக மட்​டுமே பேச வேண்​டும். எந்​தவொரு அமைப்​பை​யும் குற்​றம் சாட்​டக்​கூ​டாது’’ என்றார்.

பாஜக எம்​பிக்​கள் அனை​வரும் ராகுல் காந்​தி​யின் கருத்​துக்கு ஆட்​சேபம் தெரி​வித்து கோஷமிட்​டனர். இதற்கு நடுவே ராகுல் காந்தி பேசும்போது, ‘‘தலை​மைத் தேர்​தல் ஆணை​யரை நியமிக்​கும் குழு​வில் இருந்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தியை நீக்​கியது ஏன்? தற்​போது தலை​மைத் தேர்​தல் ஆணை​யரை நியமிக்​கும் குழு​வில் பிரதமர், மத்​திய உள்​துறை அமைச்​சர், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ஆகியோர் மட்​டுமே உள்​ளனர்.

பிரதமரும் மத்​திய உள்​துறை அமைச்​சரும் இணைந்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யரை தேர்வு செய்​கின்​றனர். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரின் கருத்​துக்கு மதிப்பு கிடை​யாது. தலை​மைத் தேர்​தல் ஆணை​யரை மத்​திய அரசு இயக்​கு​வது எந்த வகை​யில் நியா​யம் ஆகும்? தேர்​தல் நிறைவடைந்த உடன் 45 நாட்​களுக்கு பிறகு சிசிடிவி பதிவு​கள் அழிக்​கப்​படு​கிறது.

இதற்கு காரணம் என்ன? எனது கேள்வி​களுக்கு மத்​திய அரசு பதில் அளிக்க வேண்​டும். தேர்தலின்போது வாக்கு திருட்டு நடைபெறுகிறது. இது மிகப்பெரிய தேச விரோத செயல். தேர்​தல் ஆணை​யத்தை சீர்​குலைத்து இந்​திய ஜனநாயகத்தை பாஜக அரசு கேள்விக்​குறி​யாக்கி வரு​கிறது. இவ்​வாறு ராகுல் பேசி​னார்.

SCROLL FOR NEXT