இந்தியா

2-வது முறையாக சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழாவை, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யும் காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வும் இரண்​டாவது ஆண்​டாகப் புறக்​கணித்​துள்ளனர்.

கடந்த 2024-ல் டெல்லி செங்​கோட்​டை​யில் நடந்த சுதந்​திர தின விழா​வில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​திக்கு வழக்​க​மான முதல் வரிசைக்கு பதிலாக 5-வது வரிசை​யிலும், அதைத் தொடர்ந்த குடியரசு தின விழா​வில் 3-வது வரிசை​யிலும் இருக்கை ஒதுக்​கப்​பட்​டது.

ஒலிம்​பிக் பதக்​கம் வென்ற வீரர்​களுக்கு முன்​வரிசை​யில் இடமளிப்​ப​தற்​காகவே இந்த மாற்​றம் செய்​யப்​பட்​ட​தாக பாது​காப்​புத் துறை அமைச்​சகம் விளக்​கமளித்​தது. கேபினட் அமைச்​சர் அந்​தஸ்து மற்​றும் முன்​னுரிமை அட்​ட​வணை​யின்​படி 7-வது இடத்​தில் உள்ள எதிர்க்​கட்​சித் தலை​வருக்கு உரிய மரி​யாதை வழங்​கப்​பட​வில்லை என காங்​கிரஸ் கடும் எதிர்ப்பு தெரி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில், டெல்லி செங்​கோட்​டை​யில் நேற்று நடை​பெற்ற சுதந்​திர தின​விழாவை​யும் ராகுல் காந்​தி​யும் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வும் புறக்​கணித்​தனர். கடந்த ஆண்​டைப் போலவே முன் வரிசை​யில் இடம் ஒதுக்​காததே இதற்​குக் காரணம் என தகவல் வெளி​யாகி உள்​ளது.

இந்​நிலை​யில், பாஜக செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்​டாரி, பிரதமரின் உரை​யில் இடம்​பெற்ற ஒரு கூற்றை (தி​மாகி நக்​சல்) மேற்​கோள் காட்டி இந்​நிகழ்​வைப் புறக்​கணித்த எதிர்க்​கட்​சித் தலை​வர்​களைக் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி உரை​யாற்​றிய​போது, “காடு​களில் ஆயுதமேந்​திய நக்​சல்​களை ஒழிப்​ப​தில் வெற்​றியடைந்​துள்​ளோம். ஆனால் ‘தி​மாகி நக்​சல்​கள்’ (சிந்​தனை நக்​சல்​கள்) வன்​முறையை​யும், அமை​தி​யின்​மை​யை​யும் உரு​வாக்க வாய்ப்​பு​களைத் தேடிக்​கொண்​டிருக்​கிறார்​கள். இந்த அறி​வு​சார் நக்​சல்​களை அடை​யாளம் கண்டு தனிமைப்​படுத்த வேண்​டும்” என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

SCROLL FOR NEXT