ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

 
இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணம் உயர்த்தலாம்: அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

செய்திப்பிரிவு

அமிர்தசரஸ்: பஞ்​சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தனி​யார் பள்ளியில், நிலு​வை​யில் உள்ள கல்விக் கட்​ட​ணத்தை செலுத்தும்படி பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததால் 17 வயது் மாணவி தற்​கொலை செய்து கொண்​டார்.

இதையடுத்து தனி​யார் பள்​ளி​கள் ஆண்​டுக்கு 5% மட்​டுமே கட்டணத்தை உயர்த்தும் வகையில் உச்ச வரம்பு நிர்​ண​யித்து மாநில அரசு அவசர சட்​டம் இயற்​றியது. இதற்கு ஆளுநர் குலாப் சந்த் கட்​டாரியா ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

இது குறித்து பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களுக்கான அரசின் கட்டண ஒழுங்​கு​முறை அவசர சட்ட திருத்​தம்’ உடனடி​யாக அமலுக்கு வரு​கிறது. தனி​யார் பள்ளிகளின் தன்​னிச்​சை​யான மற்​றும் நியாயமற்ற கட்​ட​ணம் பெற்​றோர்​களுக்கு சிரம​மாக உள்​ளது. இதை ஒழுங்​குப்​படுத்த அவசர சட்​டம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

இதன்​படி தனி​யார் பள்​ளி​கள் கடந்த 4 ஆண்​டு​களாக வசூலித்த கல்விக் கட்டண விவரங்​களை தெரிவிக்க வேண்​டும். கல்விக் கட்டண உயர்வு ஆண்​டுக்கு 5 % என்ற அளவிலேயே இருக்க வேண்டும். 15 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக கட்​ட​ணம் வசூலித்த பள்ளி​கள், கூடு​தல் பணத்தை பெற்​றோருக்கு திருப்​பிச் செலுத்த வேண்​டும். பஞ்​சாப் மாநிலத்​தில் உள்ள 7,800 தனி​யார் பள்​ளி​கள் ஆய்வு செய்​யப்​பட​வுள்​ளன.

புதிய ஒழுங்​கு​ முறை சட்​டம் மூலம் சுமார் 32 லட்​சம் பெற்​றோர் பயனடைவர். விதி​முறை​களை மீறும் பள்​ளி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். முதல் முறை மீறும் பள்​ளிக்கு ரூ.50,000 அபராத​மும், 2-வது முறை​யாக மீறும் பள்​ளிக்கு ரூ.1 லட்சமும் அபராதம் வி​திக்​கப்​படும். தொடர்ந்து அவசர சட்ட விதிமுறை​களை மீறி​னால் பள்​ளி​யின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT