புனே: புனே மாநகராட்சிக்கு வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட சிவசேனா(ஷிண்டே) கட்சிக்கு 15 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜகவின் இந்த குறைவான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சி உறுப்பினர்கள் அக்கட்சியின் மூத்த தலைவர் நீலம் கோர்ஹேவின் வீட்டின் முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக கோர்ஹே செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிவசேனா 35 இடங்களை கேட்டது. இருதரப்பும் தொடர்ந்து பேசிய பிறகு 15 இடங்களை தருவதாக பாஜக ஒப்புக்கொண்டது” என்றார்.