இந்தியா

புனே நகராட்சி தேர்தலில் வெற்றி பெற தாய்லாந்துக்கு 5 நாள் சுற்றுலா, கார், தங்க நகை பரிசு

இலவசங்களை அள்ளித் தெளிக்கும் வேட்பாளர்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​மகா​ராஷ்டிர மாநிலம் புனே நகராட்​சிக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்​தல் நடை​பெறுகிறது. இதில் பல்​வேறு கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள் களம் இறங்​கி​யுள்​ளனர். கவுன்​சிலர் பதவியை எப்​படி​யா​வது கைப்​பற்றி விட​வேண்​டும் என்​ப​தற்​காக அவர்​கள் இலவசங்​களை அள்​ளித் தெளிக்​கின்​றனர்.

குறிப்​பாக லோகான் - தனோரி வார்டு தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர் ஒரு​வர், 11 பேருக்கு 1,100 சதுர அடி நிலம் குலுக்​கல் முறை​யில் வழங்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளார். இதற்​கான முன்​ப​தி​வும் தொடங்கி விட்​டது.

விமான் நகர் வேட்​பாளர் தம்​ப​தி​களுக்கு 5 நாள் இலவச தாய்​லாந்து சுற்​றுலாவை அறி​வித்​துள்​ளார். அனைத்து செல​வு​களை​யும் தானே ஏற்​ப​தாக அந்த வேட்​பாளர் கூறி​யுள்​ளார். தவிர மற்ற வார்​டு​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​கள், குலுக்​கல் முறை​யில் வாக்​காளர்​களுக்கு கார், மோட்​டார் சைக்​கிள் தரு​வ​தாக வாக்​குறுதி அளித்​துள்​ளனர். தங்க நகை தரு​வ​தாக இன்​னொரு​வர் கூறி​யுள்​ளார்.

குடும்​பப் பெண்​களை கவர, பைத்​தானி மற்​றும் பட்டு ரக கண்​கவர் சேலைகளை விநி​யோகித்து வரு​கின்​றனர். அத்​துடன் தையல் இயந்​திரம், சைக்​கிள் போன்​றவற்​றை​யும் வழங்கி வாக்கு சேகரித்து வரு​கின்​றனர். இளைஞர்​களின் வாக்​கு​களை கவர ரூ.1 லட்​சம் பரிசுத் தொகை​யுடன் ‘கிரிக்​கெட் போட்​டி’ நடத்​துகிறார் ஒரு வேட்​பாளர்.

இதற்​கிடை​யில், ஆளும் மகா​ராஷ்டிர அரசில் இடம்​பெற்​றுள்ள அஜித் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி, இந்த தேர்​தலில் சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யுடன் கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இதில் 40 முதல் 45 இடங்​களை சரத்​ப​வாரின் தேசி​ய​வாத கட்சி கேட்​டுள்​ளது என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ஆனால், 30 இடங்​களை ஒதுக்க அஜித் பவார் ஒப்​புக் கொண்​ட​தாக கட்சி வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இந்​நிலை​யில், எதிரெ​தி​ராக இருந்த உத்​தவ் தாக்​கரே​வும் ராஜ் தாக்​கரே​வும் 20 ஆண்​டு​களுக்​குப் பிறகு கடந்த புதன்​கிழமை ஒன்​றிணைந்​துள்​ளனர்.

சுப்ரியா சுலே தகவல்: தேசி​ய​வாத கட்சி காங்​கிரஸ் (சரத்​ப​வார்) எம்​.பி.சுப்​ரியா சுலே கூறிய​தாவது:மாநக​ராட்சி தேர்​தல்​களில் போட்​டி​யிடு​வதற்​காக கூட்​ட​ணிக்​கான அனைத்து வழிகளை​யும் பரிசீலித்து வரு​கிறோம். சித்​தாந்​தத்தை கைவிட​வில்லை என்று அஜித் பவார் தொடர்ந்து கூறி வரு​கிறார். எனவே, அவருட​னான கூட்​ட​ணிக்​கும் தொடர்ந்து நாங்​கள் பேசி வரு​கிறோம். ஆனால் எந்த முடிவோ அல்​லது இறுதி திட்​டமோ இது​வரை வரையறுக்​கப்​பட​வில்​லை.இவ்​வாறு சுப்​ரியா சுலே தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT