பிஹார் அரசு தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து தலைநகர் பாட்னாவில் டாக் பங்களா சந்திப்பு அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து கலைத்தனர்.படம்: பிடிஐ

 
இந்தியா

அரசு பணியாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி பிஹார் முதல்வர் இல்லம் முற்றுகை

மாணவர்கள் மீது போலீஸார் தடியடி

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (பிபிஎஸ்​சி) 70-வது தேர்​வில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக​வும், அதனை ரத்து செய்​யக் கோரி​யும் நூற்​றுக்​கணக்​கான மாண​வர்​கள் தலைநகர் பாட்​னா​வில் உள்ள முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி​யின் இல்​லத்தை முற்​றுகை​யிட நேற்று பேரணி சென்​ற​னர். அப்​போது, மாண​வர்​கள் மீது போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் தண்​ணீரை பீய்ச்​சி​யடித்​தும் கூட்​டத்தை கலைத்​தனர்.

பிஹார் மாநிலத்​தில் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் 70-வது தேர்வு நடத்​தப்​பட்​டது. அதில் பல்​வேறு முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​தது. எனவே, அந்த தேர்வை ரத்து செய்​து​விட்டு புதி​தாகத் தேர்வு நடத்த வேண்​டும் என்று மாண​வர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​ற​னர். இந்​நிலை​யில், தலைநகர் பாட்​னா​வில் உள்ள காந்தி மைதானத்​தில் இருந்து நேற்று காலை 10 மணி​யள​வில் மாண​வர்​கள் பேரணி தொடங்​கினர்.

முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி​யின் இல்​லத்தை நோக்கி மாண​வர்​கள் செல்​வதைத் தடுக்க வழியெங்​கும் பாது​காப்​புப் படை​யினர் குவிக்​கப்​பட்டு தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. எனினும், மாண​வர்​கள் தடுப்​பு​களை அகற்​றி​விட்டு முன்​னேற முயன்​ற​தால் இரு தரப்​பினருக்​கும் இடையே மோதல் உரு​வானது. இதையடுத்​து, பல இடங்​களில் போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும், தண்​ணீரைப் பீய்ச்​சி​யடித்​தும் போராட்​டக்​காரர்​களைக் கலைக்க முயன்​ற​னர்.

போலீ​ஸாரின் இந்த நடவடிக்​கை​யை​யும் மீறி மாண​வர்​கள் முதல்​வர் இல்​லத்​தின் அருகே முற்​றுகை​யிட சென்​ற​னர். இதையடுத்து பல போராட்​டக்​காரர்​களைப் போலீ​ஸார் கைது செய்​தனர்.

பிபிஎஸ்சி - டிஆர்இ 4 தேர்வை ஒரே கட்​ட​மாக நடத்த வேண்​டும். பணி நியமன செயல்​பாடு​களில் வெளிப்​படைத்​தன்மை இருக்க வேண்​டும். பிஹார் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்​வு​கள் நடத்​தப்பட வேண்​டும் மற்​றும் இந்தி வழித் தேர்வு எழுதுபவர்​களுக்​குச் சமமான வாய்ப்பு வழங்​கப்பட வேண்​டும் ஆகிய கோரிக்​கை​களை வலி​யுறுத்தி பாட்​னா​வின் கர்​தானி​பாக் பகு​தி​யில் மாண​வர்​கள் பல வாரங்​களாகப் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற​னர்.

இதுகுறித்து மாண​வர் பிர​தி​நி​தி​கள் கூறும்​போது, “எங்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்த இளநிலை அதி​காரி​களை அரசு நியமிப்​ப​தால் பிரச்​சினை முடிவுக்கு வரு​வ​தில்​லை. முதல்​வர் சாம்​ராட் சவுத்ரி அல்​லது கல்வி அமைச்​சரை நேரில் சந்​திக்க அனு​மதி அளித்​​தால் மட்​டுமே போராட்​டத்​தைக் கைவிடு​வோம்” என்​றனர்​.

SCROLL FOR NEXT