இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சத்தீஸ்கரில் டிஜிபி, ஐஜி.க்கள் மாநாடு

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலம் ராய்ப்​பூரில் நடை​பெற்று வரும் டிஜிபி.க்​கள் மற்​றும் ஐ.ஜி.க்​கள் மாநாட்​டுக்கு பிரதமர் மோடி நேற்று தலைமை தாங்​கி​னார்.

அனைத்து மாநில டிஜிபி.க்​கள் மற்​றும் ஐ.ஜிக்​கள் பங்​கேற்​கும் 60-வது மாநாடு சத்​தீஸ்​கர் மாநிலம் ராய்ப்​பூரில் உள்ள ஐஐஎம் வளாகத்​தில் நேற்று முன்​தினம் தொடங்​கியது. இதை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தொடங்கி வைத்​தார். 3 நாட்​கள் நடை​பெறும் இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்​டார். இதில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல், உளவுத்​துறை தலை​வர் தபன் குமார் தேகா, சிபிஐ இயக்​குநர் பிர​வீன் சூட் உட்பட காவல்​துறை உயர் அதி​காரி​கள் பலர் கலந்து கொண்​டனர்.

இந்த மாநாட்​டில் பங்​கேற்​றது குறித்து எக்ஸ் தளத்​தில் கருத்து தெரி​வித்த பிரதமர் மோடி, ‘‘ராய்ப்​பூரில் நடை​பெற்ற டிஜிபி.க்​கள் மற்​றும் ஐ.ஜி.க்​கள் மாநாட்​டின் முதல் நாளில் நாட்​டின் பாது​காப்பு அம்​சங்​கள் குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. காவல் துறை​யில் பின்​பற்​றப்​படும் சிறந்த நடை​முறை​களை​யும், புதுமை கண்​டு​பிடிப்​பு​களை​யும் பகிர்ந்து கொள்ள இந்த மாநாடு மிகச்​சிறந்த இடம்’’ என குறிப்​பிட்​டார்.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பேசுகை​யில், ‘‘நக்​சல், வடகிழக்கு மற்​றும் ஜம்மு காஷ்மீர் பிரச்​சினை​களுக்கு நிரந்தர தீர்வை மோடி அரசு அளித்​துள்​ளது. நக்​சல் பாதிப்பு மாவட்​டங்​களின் எண்​ணிக்கை வெகு​வாக குறைந்​து​விட்​டது. போதைப் பொருள் மற்​றும் அனைத்து வகை​யான குற்​றங்​களை ஒழிக்க காவல்​துறை முழு வீச்​சில் செயல்பட வேண்​டும். உளவுத் தகவல்​கள் துல்​லிய​மாக இருக்க வேண்​டும். அனைத்து மாநில காவல்​துறை​களும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும். காவல்​துறையை நவீன​மாக்க புதிய குற்ற சட்​டங்​களை பயன்​படுத்​த வேண்​டும்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT