இந்தியா

அசாம் போடோ பழங்குடியினரின் ‘பகுரும்பா’ நடனத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, கின்னஸ் சாதனைக்காக 10,000 போடோ பழங்குடியினர் பங்கேற்கும் பகுரும்பா நடனத்தை பார்வையிட்டார்.

அசாம் மாநிலத்​துக்கு 2 நாள் சுற்​றுப் பயண​மாக பிரதமர் மோடி நேற்று மாலை வந்​தார். இங்கு கின்​னஸ் சாதனைக்​காக போடோ பழங்​குடி​யின கலைஞர்​கள் 10,000 பேர் பங்​கேற்ற பகுரும்பா நடனம், குவாஹாட்டி நகரில் உள்ள அர்​ஜுன் போகேஸ்​வர் பரூவா விளை​யாட்டு அரங்​கில் நேற்று மாலை நடை​பெற்​றது. இதை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். அசாம் ஆளுநர் லட்​சுமன் பிர​சாத் ஆச்​சார்​யா, மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோ​ரும் பிரதமர் மோடி​யுடன் இந்த நடனத்தை பார்​வை​யிட்​டனர்.

குவாஹாட்டி நகரில் உள்ள அரசு விருந்​தினர் மாளி​கை​யில் நேற்று இரவு தங்​கிய பிரதமர் மோடி, இன்று காலை கலி​யா​போர் செல்​கிறார். இங்கு ரூ.6,957 கோடி மதிப்​பில் காசி ரங்கா தேசிய பூங்​கா​வின் விரி​வாக்க பணி​களுக்கு பிரதமர் மோடி அடிக்​கல் நாட்​டு​கிறார். இங்கு நடை​பெறும் பொதுக் கூட்​டத்​தி​லும் பிரதமர் மோடி உரை​யாற்​றுகிறார்.

மேலும் திப்​ரூகர் - கோமதி நகர் (லக்​னோ) மற்​றும் காமக்யா - ரோத்​தக் ஆகிய வழித்​தடங்​களில் அம்​ரித் பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்​கிறார்.

SCROLL FOR NEXT