இந்தியா

முதல் முறையாக நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

வெலிங்டன்: பிரதமர் மோடி அடுத்த வாரம் நியூசிலாந்​திற்​குத் தனது முதலா​வது அதி​காரப்​பூர்​வப் பயணத்தை மேற்​கொள்ளவுள்ள​தாக அந்​நாட்​டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்​துள்​ளார்.

இரு நாடு​களுக்​கும் இடையே அண்​மை​யில் கையெழுத்​தான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை (எஃப்​டிஏ) அடுத்த கட்​டத்​திற்கு எடுத்​துச் செல்​வதே இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்​கப் பயணத்​தின் முதன்மை நோக்​கம் என்​றும் அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.

பிரதமர் மோடி​யின் வருகை குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்​சன் தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ள​தாவது: இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்​திற்​குத் தனது முதல் அதி​காரப்​பூர்​வப் பயணத்தை மேற்​கொள்​ள​விருக்​கிறார் என்​பதை மகிழ்ச்​சி​யுடன் தெரி​வித்​துக் கொள்​கிறேன். உலகின் மிகப்​பெரிய மற்​றும் மிக வேக​மாக வளர்ந்து வரும் பொருளா​தார நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்​று.

நியூசிலாந்​தின் பொருளா​தார வளர்ச்​சிக்கு இந்​தியா மிக​வும் முக்கிய​மான நாடாகும். கடந்த ஏப்​ரல் மாதம் கையெழுத்​தான நியூசிலாந்து - இந்​தியா தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​தின் மூலம் இரு நாடு​களின் உறவை அடுத்த கட்​டத்​திற்​குக் கொண்டு செல்​ல​விருக்​கிறோம். இது நியூசிலாந்​தில் கூடு​தல் வேலை​வாய்ப்​பு​கள், அதிக ஏற்​றுமதி மற்​றும் வலு​வான பொருளா​தார வளர்ச்சியைத்தரும்.

மேலும், 140 கோடி நுகர்​வோரைக் கொண்ட இந்​தி​யச் சந்​தை​யில், நமது பொருட்​கள் மற்​றும் சேவை​களை ஏற்​றுமதி செய்​வதற்​கான புதிய வாய்ப்​பு​கள் இதன் மூலம் திறக்​கப்​படும். இது நியூசிலாந்து சமூகத்​திற்கு அதிக வரு​வாயைக் கொண்டு வரு​வதுடன், புதிய வேலைகளை உரு​வாக்​கி, ஊதி​யத்​தை​யும் உயர்த்​தும். இவ்​வாறு லக்​சன் குறிப்​பிட்​டுள்​ளார்.

உலக அளவில் வேக​மாக வளர்ந்து வரும் பொருளா​தா​ரச் சக்தியாக விளங்​கும் இந்​தி​யா​வுடன், பொருளா​தார ரீதியி​லான உறவை வலுப்​படுத்த நியூசிலாந்து அரசு தீவிர ஆர்​வம் காட்டி வருகிறது. இந்​தச் சூழலில், பிரதமர் நரேந்​திர மோடி​யின் இந்த முதல் நியூசிலாந்து பயணம், இரு நாட்டு உறவு​களி​லும் புதிய சகாப்​தத்​தைத் தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. குறிப்பாக, இரு நாடு​களுக்கு இடையே​யான வர்​த்​தகம்​, முதலீடு மற்​றும்​ வேலை​வாய்​ப்​பு​களைப்​ பெருக்​கு​வ​தில்​ இந்​த உச்​சி​மா​நாடு முக்​கியப்​ பங்​கு வகிக்​கும்​.

SCROLL FOR NEXT