இந்தியா

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எத்​தி​யோப்​பியாவில் பிரதமர் மோடிக்கு அந்​நாட்​டின் உயரிய ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்​தி​யோப்​பி​யா’ என்ற விருதை

அந்​நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி வழங்கி கவுர​வித்​தார். அதன்பின், நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி கைதட்டி ரசித்தார்.

விருது பெற்றது குறித்து மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்​துகள். இது ஒவ்​வொரு இந்​தி​யருக்​கும் பெரு​மை​யான தருணம். இது அவருடைய தலை​மை​யின் கீழ் உலகளா​விய ராஜதந்​திரத்​தில் இந்​தி​யா​வின் அந்​தஸ்து வளர்ந்து வரு​வதைக் குறிக்​கிறது’’ என கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT