இந்தியா

ஜி20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு: கனடாவுடனான வர்த்தகத்தை ரூ.4.46 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கனடா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை தனியாக சந்தித்துப் பேசினார்.

ஜி20 உச்சி மாநாடு தென்​னாப் பிரிக்​கா​வின் ஜோகன்​னஸ்​பர்க் நகரில் நடை​பெற்​றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்​னியை சந்​தித்து பேசி​னார். இதையடுத்து பிரதமர் மோடி கூறி​யுள்​ள​தாவது: கனடா பிரதமர் கார்​னி​யுடன் நடத்​திய பேச்​சு​வார்த்தை மிக​வும் பயனுள்​ள​தாக இருந்​தது. வரும் மாதங்​களில் குறிப்​பாக, வர்த்​தகம், முதலீடு. தொழில்​நுட்​பம், எரிசக்​தி, புத்​தாக்​கம், கல்வி ஆகிய​வற்​றில் இருதரப்பு உறவு​களை மேம்​படுத்த இரு​வரும் ஒப்​புக்​கொண்​டோம். இதன் காரண​மாக, வரும் 2030-க்​குள் 50 பில்​லியன் டாலர் (ரூ.4.46 லட்​சம் கோடி) வர்த்தக இலக்கை அடைய இலக்கு நிர்ணயித்​துள்​ளோம்.

கனடாவைச் சேர்ந்த ஓய்​வூ​திய நிதி​யங்​களும் இந்​திய நிறு​வனங்​களில் முதலீடு செய்​வ​தில் மிக ஆர்​வ​மாக உள்​ளன. எதிர்​காலத்​தில் பாது​காப்பு மற்​றும் விண்​வெளி துறை​களில் ஆழமான ஒத்​துழைப்​புக்​கான சாத்​தி​யக்​கூறுகளை ஆராய​வும் சம்​மதம் தெரி​வித்​துள்​ளோம். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

ஜி20 மாநாட்​டில் ஜப்​பானிய பிரதமர் சானே தகைச்​சி​யை​யும் பிரதமர் மோடி சந்​தித்​தார். அப்​போது, புத்​தாக்​கம், பாது​காப்​பு, டேலண்ட் மொபிலிட்டி உள்​ளிட்ட பல துறை​களில் ஒத்​துழைப்பை மேம்​படுத்​து​வதற்​கான வழி​முறைகள் குறித்து இரு​வரும் ஆலோசனை நடத்​தினர். வலு​வான கூட்டாண்மை மூலம் இந்தியா-ஜப்பான் இடையே​யான வர்த்​தகத்தை புதிய உச்சத்துக்கு கொண்​டு​செல்ல முடி​யும் என்று இரு​வரும் நம்பிக்கை தெரி​வித்​தனர்.

ஜி20 மாநாட்​டின் இடையே இத்​தாலி பிரதமர் ஜார்​ஜியோ மெலோனியை​யும் பிரதமர் மோடி சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்தி​னார். அப்​போது, டெல்​லி​யில் நடந்த தீவிர​வாத தாக்குதலுக்கு மெலோனி கடும் கண்​டனத்தை தெரி​வித்​தார். மேலும், தீவிர​வாதத்​துக்கு எதி​ரான போரில் இந்​தி​யா​வுடன் எப்போதும் உறு​தி​யாக நிற்​போம் என்று மெலோனி தெரி​வித்​தார்.

வர்த்​தகம், முதலீடு, பாது​காப்​பு, விண்​வெளி, அறி​வியல், தொழில்​நுட்​பம், கல்வி உள்​ளிட்ட துறை​களில் இரு தரப்​பும் நேர்​மறை​யான செயல்​பாடு​களை கொண்​டுள்​ள​தாக இந்த சந்​திப்​பின்போது மதிப்​பாய்வு செய்​யப்​பட்​டது. 2025-29 கூட்டு வியூக செயல் திட்டத்தின் முன்​னேற்​றத்​தில் இரு தலை​வர்​களும் திருப்தி தெரிவித்​தனர். எதிர்​காலத்​தில் உலகளா​விய பல தளங்​களில் இணைந்து பணி​யாற்​று​வதற்கு ஆவலுடன்​ இருப்​ப​தாக இருவரும் தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT