இந்தியா

நொய்டா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நொய்டா சர்​வ​தேச விமான நிலை​யத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இது 2 நிமிடத்​துக்கு ஒரு விமானம் புறப்​படும் திறன் வாய்ந்​தது என பெரு​மித​மாத தெரி​வித்​தார்.

உத்​தரப் பிரதேச மாநிலம் ஜேவாரில் புதி​தாக நிறு​வப்​பட்​டுள்ள நொய்டா சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் முதல் பகு​தியை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது:

          

புதி​தாக திறக்​கப்​பட்​டுள்ள நொய்டா சர்​வ​தேச விமான நிலை​யம், வட இந்​தியா முழு​வதை​யும் உலக நாடு​களு​டன் இணைக்​கும் முக்​கிய மைய​மாக அமை​யும். இங்​கிருந்து ஒவ்​வொரு 2 நிமிடத்​துக்​கும் ஒரு விமானம் இயக்​கப்​படும் வகை​யில் இந்த விமான நிலை​யம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

முந்​தைய சமாஜ்​வாதி கட்சி ஆட்​சி​யில் நொய்​டா, சுய​லாபத்​துக்​காக ஒரு ‘ஏடிஎம்' இயந்​திர​மாக பார்க்​கப்​பட்​டது. ஆனால், தற்​போது பாஜக ஆட்​சி​யில் நொய்​டா, மாநிலத்​தின் வளர்ச்சி இன்​ஜி​னாக மாறி​யுள்​ளது.

செமிகண்​டக்​டர் தொழிற்​சாலை, மீரட் மெட்ரோ மற்​றும் நமோ பாரத் ரயில்​கள் என உத்தர பிரதேசம் நவீன வசதி​களு​டன் முன்​னேறி வரு​வது ‘இரட்டை இன்​ஜின்' அரசின் முயற்​சிக்​குச் சான்​றாகும்.

விவசாயிகள், சிறு, குறு தொழில்கள், மேற்கு உத்தர பிரதேசத்தின் இளைஞர்களுக்கு இந்த விமான நிலையம் ஏராளமான புதிய வாய்ப்புகளை வழங்கும்.

அமெரிக்கா - ஈரான் இடையி​லான போர் சூழல் நில​வும் நிலை​யிலும், இந்​தியா தனது வளர்ச்​சிப் பாதை​யில் தொய்​வின்றி முன்​னேறி வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்த விழா​வில் உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், மத்​திய விமானப் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ராம் மோகன்​ நா​யுடு உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

SCROLL FOR NEXT