இந்தியா

வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை: பிரதமர் மோடி உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வு முறை​கேடு​களைக் கண்​டித்து நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லும் போராட்​டம் நடந்து வரும் நிலை​யில், ‘தேர்வு வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக விரைந்து விசா​ரிக்​கும் வகை​யில் விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். அதன்​மூலம் குற்​ற​வாளி​களுக்கு கடும் தண்​டனை பெற்​றுத் தரப்​படும்’ என்று பிரதமர் மோடி உறுதி அளித்​துள்​ளார்.

நீட் தேர்​வில் நடந்த முறை​கேடு​களுக்கு கண்​டனம் தெரி​வித்​தும், இந்த முறை​கேடு​களுக்கு தார்​மீகப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யும் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (‘காக்​ரோச் ஜனதா பார்ட்டி - சிஜேபி) டெல்லி ஜந்​தர்

மந்​தரில் கடந்த ஜூன் 28-ம் தேதி போராட்​டத்தை தொடங்​கியது. இதில் சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் கலந்​து ​கொண்டு 21 நாட்​களுக்கு மேலாக உண்​ணா​விரதம் இருந்தார். உடல்​நலம் குன்​றிய​தால், அவரை போலீ​ஸார் மீட்டு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

இதன்​பிறகு, சிஜேபி கட்சி சார்​பில் நாடாளு​மன்​றம் நோக்கி கடந்த 20-ம் தேதி பேரணி நடத்​தப்​பட்​டது. இதில் ஏராள​மான மாணவர்​கள் பங்​கேற்​றனர். இதே​போல, நாட்​டின் பல்​வேறு மாநிலங்​களி​லும் நீட் தேர்​வுக்கு எதி​ராக இளைஞர்​கள், மாணவர் அமைப்​பினர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தேர்வு வினாத்​தாள் கசிவு விவகாரம் தொடர்​பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று தெரிவித்துள்​ள​தாவது: நமது இளைஞர்​களின் நலன் மற்​றும் எதிர்​காலத்​தை​விட முக்​கிய​மானது வேறு எது​வும் இல்​லை. இதற்கு அரசு முதல் முன்​னுரிமை அளிக்​கிறது. வினாத்​தாள் கசி​வில் தொடர்பு உடைய​வர்​களுக்கு விரை​வான மற்​றும் கடுமை​யான தண்​டனை பெற்​றுத் தரு​வதற்​காக விரைவு (‘ஃ​பாஸ்ட் டிராக்) நீதி​மன்​றங்​களை அமைக்க மத்​திய அரசு முடி​வெடுத்​துள்​ளது. இதற்​கான முயற்​சிகளை மேற்​கொள்​ளு​மாறு அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளேன்.

வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் எடுக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட அமைப்​பு​கள், அதி​காரி​களுக்கு அறி​வுறுத்தி உள்​ளேன். மாணவர்​களின் நலன்​களைப் பாது​காப்​ப​தற்​காக அரசு எடுத்து வரும் தொடர் முயற்​சிகளில் இது ஒரு முக்​கிய​மான நடவடிக்​கை. நமது இளைஞர்​களின் எதிர்​காலத்​துக்​குத் தீங்கு விளைவிக்க முயற்​சிப்​பவர்​கள் யாரும் தப்ப முடி​யாது. இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

எனினும், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்ய வேண்​டும் என்​ப​தையே சிஜேபி கட்சி மற்​றும் எதிர்க்​கட்​சி​யினர் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதுகுறித்து திமுக எம்​.பி. திருச்சி சிவா கூறிய​தாவது: நீட் மறு​தேர்​வும் நடத்தி முடிக்​கப்​பட்​டு​விட்​டது. ஆனால், நீட் தேர்வு முறை​கேட்​டில் ஈடு​பட்ட குற்​ற​வாளி​கள் முழு​மை​யாக கைது செய்​யப்​பட​வில்​லை. இந்த சூழலில், விரைவு நீதி​மன்​றம் அமைப்​ப​தாக பிரதமர் மோடி அறி​வித்​திருப்​பது நகைப்​புக்​குரியது. மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் இது​வரை வாய்​திறக்​க​வில்​லை.

மாணவர்​கள் போராட்டம் தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் வி​வா​திக்க வேண்​டும் என கோரி வருகிறோம். ஆனால், நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகள் பேச அனு​ம​திக்​கப்​படு​வது இல்லை. நா​டாளு​மன்​றத்​தை மதித்​து வி​வா​திக்​க​வும்​, பதில்​ அளிக்​க​வும்​ பிரதமர்​ மோடி முன்​வர​வில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT