இந்தியா

‘பி.எம். கேர்ஸ்’ நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: 2024-25-ல் வட்டி வருவாய் ரூ.475 கோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா பெருந்​தொற்று காலத்​தில் (2020-ல்) பிரதமர் மோடி​யால் தொடங்​கப்​பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதி​யின் மொத்த இருப்​பு, 2024-25-ம் நிதி​யாண்​டின் முடி​வில் ரூ.8,452 கோடி​யாக அதிகரித்​துள்​ளது. இந்த தகவல் அதன் அதி​காரப்​பூர்வ இணையதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்ள தணிக்கை அறிக்கையில் இடம்பெற்றுஉள்​ளது.

இதில் சுவாரஸ்​ய​மான விஷ​யம் என்​னவென்​றால், மொத்த நிதியில் 93% வங்​கி​யில் நிலை​யான வைப்பு நிதி​யில் முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளதுடன், 2024-25-ம் ஆண்​டில் கிடைத்த வட்டி வருவா​யும் (ரூ.475 கோடி), அந்த நிதி​யாண்​டில் பெறப்​பட்ட மொத்த நன்​கொடைக்கு நிக​ராக உள்​ளது.

2025 மார்ச் 31 நில​வரப்​படி ‘பி.எம். கேர்ஸ்’ கணக்​கில் ரூ.8,452 கோடி இருப்பு உள்​ளது. இதில், ரூ.7,846.65 கோடி (93%) நிலை​யான வைப்பு நிதி​யிலும் (எப்​டி), மீத​முள்ள தொகை அங்​கீகரிக்​கப்​பட்ட வங்​கி​களில் ரொக்​கக் கணக்​கிலும் வைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த முழு நிதி​யாண்​டிலும் ‘பி.எம். கேர்ஸ்’ அமைப்​பானது வெறும் ரூ.87.85 லட்​சத்தை மட்​டுமே செல​விட்​டுள்​ளது. 2024-25 நிதியாண்டு நிறைவடைந்து ஓராண்​டுக்​கும் மேலான நிலை​யில், 2026 ஆகஸ்ட் முதல் வாரத்​தில் தணிக்கை செய்​யப்​பட்டு கையெழுத்​திடப்​பட்ட இந்​தத் தணிக்கை அறிக்கை தற்​போது வெளியிடப்பட்டுள்​ளது.

அவசரநிலைகள் மற்​றும் இயற்கை அல்​லது மனித​னால் ஏற்​படும் பேரிடர்​களை எதிர்​கொள்​வது, சுகா​தா​ரக் கட்​டமைப்பை மேம்​படுத்​து​வது, ஆராய்ச்​சிகளுக்கு நிதி​யளிப்​பது மற்​றும் பாதிக்கப்பட்ட மக்​களுக்கு நிதி​யுதவி வழங்​கு​வது போன்ற நோக்கங்​களுக்​காக பொது தொண்டு அறக்​கட்​டளை​யாக அமைக்கப்பட்​டது​தான்​ ‘பி.எம். கேர்​ஸ்’​ நிதியம்​.

SCROLL FOR NEXT