போஜ்​சாலா​வில் வளாகம்

 
இந்தியா

வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை பாரபட்சமின்றி பின்பற்ற வேண்டும்: ஜமாத் எ இஸ்லாமி ஹிந்த் தலைவர் வலியுறுத்தல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்​திய பிரதேச மாநிலம் போஜ்​சாலா​வில் உள்ள சர்ச்​சைக்​குரிய வளாகம் தொடர்​பான வழக்​கில், இந்​தூர் உயர் நீதி​மன்ற அமர்வு நேற்​று​ முன்​தினம் தீர்ப்பு வெளி​யிட்​டது. அதில், ‘‘வரலாற்று ஆவணங்​கள், இலக்​கிய குறிப்​பு​கள் போன்​றவற்றை ஆராய்ந்த போது போஜ்​சாலா வாக்​ (சரஸ்​வ​தி) தேவி கோயில்​தான் என்று உறு​தி​யாகிறது. முஸ்​லிம்​களின் தொழுகை அங்கு நிறுத்​தப்பட வேண்​டும்’’ என்று உத்​தர​விட்​டது.

இதுகுறித்து இந்​திய ஜமாத் இ இஸ்​லாமி ஹிந்த் அமைப்​பின் தேசி​யத் தலை​வர் சையத் சாதத்​துல்லா ஹுசைனி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யலமைப்​பின் 25, 26-வது பிரிவு​களின் கீழ் உத்​தர​வாதம் அளிக்​கப்​பட்ட மத உரிமை​களின் பாது​காப்பு குறித்​து, இந்​தத் தீர்ப்பு அரசி​யலமைப்பு சார்ந்த கேள்வி​களை எழுப்பி உள்ள. பல தசாப்​தங்​களாக போஜ்​சாலா வளாகத்​தில் வழி​பாட்டு முறை​களை இரு சமூகங்​களும் பின்​பற்றி வந்​தனர். இந்​நிலை​யில், ஒரு சமூகத்​தின் வழி​பாட்டு உரிமை​களைப் பறித்​து, மற்​றொரு சமூகத்​துக்கு முன்​னுரிமை அளிப்​பது அனைத்து மதங்​களுக்​கும் சம மரி​யாதை அளிக்​கும் கொள்​கை​யைச் சிதைக்​கும்.

மேலும், சுதந்​திரத்​துக்​குப் பிறகு இருந்த மத வழி​பாட்டு தலங்​களைப் பாது​காப்​பதை நோக்​க​மாகக் கொண்ட ‘வழி​பாட்​டுத் தலங்​கள் பாது​காப்​புச் சட்​டம், 1991’ தற்​போது புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, வரலாற்​றுச் சர்ச்​சைகள் மீண்​டும் எழு​வதைத் தடுக்க, அந்​தச் சட்​டத்தை பின்​பற்ற வேண்​டும்.

அதே​போல், முஸ்​லிம்​களின் வழி​பாட்​டுக்கு மாற்று நிலத்தை ஒதுக்​கீடு செய்ய முன்​வைக்​கப்​படும் ஆலோ​சனை​யும் கவலைக்​குரியது. நீதித்​துறை தனது செயல்​பாடு​களில் பாரபட்​சமற்​ற​தாக இருக்க வேண்​டும். துர​திருஷ்ட​வச​மாக சமீபத்​திய நிகழ்​வு​கள் இதற்கு நேர்​மாறான ஒரு தோற்​றத்தை உரு​வாக்கி வரு​கின்​றன. பாதிக்​கப்​பட்ட முஸ்​லிம் சமூகத்​தின் அனைத்​துக் கவலைகளும், அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் வரம்​புக்​குள் முறை​யாக தீர்க்​கப்​படு​வதை உறுதி செய்​யும். இதற்​​காக, மேல்​முறை​யீடு செய்வோம்​. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT