இந்தியா

விமானி செய்த தவறே விபத்துக்கு காரணம்: புலனாய்வு அமைப்பின் முதற்கட்ட விசாரணையில் தகவல்

செய்திப்பிரிவு

மும்பை: மோச​மான வானிலை​யால் விமானி செய்த தவறான கணிப்பு விபத்​துக்கு காரண​மாக இருக்​கலாம் என முதற்​கட்ட விசாரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

மகா​ராஷ்டிர மாநிலம் பாராமதி அருகே நேற்று முன்​தினம் காலை​யில் தரை​யிறங்க முயன்ற சிறிய ரக விமானம் விபத்​துக்​குள்​ளாகி தீப்​பிடித்து எரிந்​தது. இ​தில் துணை முதல்​வரும், தேசி​ய​வாத காங்​கிரஸ் தலை​வரு​மான அஜித் பவார் (67) உட்​பட, அந்த விமானத்​தில் பயணம் செய்த பைலட் உள்​ளிட்ட 5 பேரும் உயி​ரிழந்​தனர்.

          

இந்​நிலை​யில், விமான விபத்து புல​னாய்வு அமைப்​பின் (ஏஏஐபி) சிறப்​புக் குழு​வினர், விபத்து நடந்த பகு​தியை நேற்று முன்​தினம் மாலை பார்​வை​யிட்​டனர்.

இதனிடையே, மோச​மான வானிலை மற்​றும் போதிய பார்​வைத்​திறன் இல்​லாத சூழலில், தரை​யிறங்​கும்​போது விமானி செய்த தவறான கணிப்பு விபத்​துக்கு காரண​மாக இருக்​கலாம் என்று முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. தொழில்​நுட்​பக் கோளாறு ஏதேனும் ஏற்​பட்​டதா என்​பது குறித்​தும் விசா​ரணை நடக்கிறது.

பாராமதி போன்ற கட்​டுப்​பாடற்ற விமான நிலை​யங்​களில், நிலை​யான பார்​வைத்​திறன் விமான விதி​களின்​படி (VFR) 5 கி.மீ. தூரப் பார்​வைத் திறன் அவசி​யம் தேவை என்று அதி​காரி​கள் கூறியுள்ளனர். இருப்​பினும், பார்​வைத் திறன் 3 கி.மீ. ஆக இருக்கும்​போது, விமானி சிறப்பு VFR-ஐப் பயன்​படுத்த முடி​யும். இந்த விபத்​தின்​போது அத்​தகைய சூழலே நில​வியது.

சரி​யாக என்ன நடந்​தது என்​ப​தை​யும், எந்​தப் புள்​ளி​யில் இந்​த விபத்து நிகழ்ந்​தது என்​ப​தை​யும் கண்​டறிய, புல​னாய்​வாளர்​கள் இப்​போது விமானத்​தின் சீரமைப்​பு, ஓடு​தளத்​திலிருந்து விமானத்​தின் தொலைவு மற்​றும் நிகழ்​வு​களின் வரிசை ஆகிய​வற்றை ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

மேலும், மற்ற விமான நிலை​யங்​களைப் போலல்​லாமல், கிளாஸ் ஜி (Class G) வகை​யைச் சேர்ந்த பாராமதி விமான நிலை​யத்​தில் வழி​காட்டு கருவி​களோ அல்​லது முறை​யான முழுநேர விமானப் போக்​கு​வரத்து கட்​டுப்​பாட்டு அமைப்போ இல்​லை.

இதுகுறித்து அதி​காரி​கள் வட்​டாரம் கூறும்​போது, “வி​மானி ஓடு​தளத்​தைக் கண்​ணால் பார்த்த பிறகு, ஒரு தவறான முடிவை எடுத்திருக்​கலாம். மேலும் விமானப் பாதையை மாற்ற கடுமை​யான திருத்​தங்​களைச் செய்ய முயன்​றிருக்​கலாம். இது விமானத்தின் கட்​டுப்​பாட்டை இழக்க வழி​வகுத்​திருக்​கலாம். இந்தத் துயரத்​தின் துல்​லிய​மான காரணங்​களைக் கண்​டறிய தொடர்ந்து ஆய்வு நடை​பெற்று வரு​கிறது” என்று தெரி​வித்​தன.

கருப்பு பெட்டி மீட்பு: செய்த லியர்​ஜெட் 45 விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விமான விபத்து புல​னாய்வு அலு​வல​கம் (ஏஏஐபி) விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளது. விசா​ரணை விரை​வாக நடை​பெறு​வ​தாக​வும், விமானத்​தின் கருப்பு பெட்டி மீட்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் விமான போக்​கு​வரத்து அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இதில் உள்ள தகவல்​கள் வெளி​யான பின்​பு, விமான விபத்​துக்​கான காரணம் தெரிய​வரும். விமான விபத்து விசா​ரணைக்​காக டெல்லி மற்​றும் மும்​பையி​ல் இருந்து சென்ற ஏஏஐபி அதி​காரி​கள் விபத்து நடத்த இடத்​தில்​ ஆய்வு மேற்​கொண்​டனர்​.

SCROLL FOR NEXT