இந்தியா

ஆயுர்வேத சிகிச்சை பெற கேரளா சென்ற பவன் கல்யாண்

செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்​திர மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாணுக்​கு, கடந்த மாதம் மும்​பை​யில் உள்ள பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை​யில் வலது தோள்​பட்​டை​யில் அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது.

மருத்​து​வ​மனை​யில் இருந்து திரும்​பிய ஒரே வாரத்​தில், கையில் கட்​டுடன் தனது அரசு அலு​வல​கப் பணி​களை கவனிக்​கத் தொடங்​கி​னார். தொடர்ச்​சி​யான வேலைப் பளு காரண​மாக, அறுவை சிகிச்சை செய்​யப்​பட்ட இடத்​தில் அவருக்கு மீண்​டும் வலி தீவிரமடைந்​தது.

இதையடுத்​து, அவரது உடல்​நிலை​யைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், வலி நிவாரணம் மற்​றும் விரை​வான குணமடைதலுக்கு மரபு​சார் ஆயுர்​வேத தெரபி சிகிச்​சையை மேற்​கொள்​ளு​மாறு ஆலோ​சனை வழங்​கினர். மருத்​து​வர்​களின் ஆலோ​சனையை ஏற்​று, கேரளா​வில் தங்கி ஆயுர்​வேத தெரபி சிகிச்சை எடுத்​துக்​கொள்​வதற்​காக அவர் நேற்று அம்​மாநிலத்​துக்கு புறப்​பட்​டுச் சென்​றார். அங்கு சில நாட்​கள் தங்​கி​யிருந்து அவர் சிகிச்சை பெறவுள்​ள​தாகத் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT