இந்தியா

கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘கோரிக்​கைகளை நிறைவேற்​றா​விட்​டால், எங்​களது அடுத்​தகட்ட போராட்​டம் பெரிய அளவில் இருக்​கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்​சி​யினர் (சிஜேபி) அறி​வித்​துள்​ளனர். இதனால் டெல்லி​யில் துணை ராணுவ படை வீரர்​கள் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி (சிஜேபி) கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்​தைத் தொடங்​கியது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளு​மன்​றம் நோக்கி சிஜேபி கட்​சி​யினர், ஆதர​வாளர்​கள் பேரணி சென்​றனர். அப்​போது, போராட்​டக்​காரர்​கள் - போலீ​ஸார் இடையே தள்​ளு முள்ளு ஏற்​பட்​டது. போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும், கண்​ணீர் புகை குண்​டு​கள் வீசி​யும் கூட்​டத்​தைக் கலைத்​தனர். போராட்டக்காரர்களும் போலீஸார், துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், சிஜேபி செய்​தித் தொடர்​பாளர் அசுதோஷ் ரான்கா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, ‘‘சுதந்​திர இந்​தி​யா​வில் நடந்த போராட்​டங்​களில் இது​தான் மிகப்​பெரியது. கடந்த 20-ம் தேதி நடந்த போராட்​டம் வெறும் முன்​னோட்​டம்​தான் (டிரெய்​லர்). அடுத்​தகட்​ட​மாக எங்​களது போராட்​டம் மிகப்​பெரிய அளவில் இருக்​கும். மத்​திய அரசு எங்​கள் கோரிக்​கைகளை ஏற்​கா​விட்​டால், லட்​சக்​ கணக்​கான இளைஞர்​கள் டெல்​லியை நோக்கி வரு​வார்​கள். கைது நடவடிக்கைக்கும் தயா​ராக இருக்​கிறோம். எங்​கள் போராட்​டத்​துக்​குப் பாஜக உட்பட எந்த கட்சியினரும் ஆதரவு அளிக்கலாம்’’ என்றார்.

சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்கே நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், ‘‘கடந்த 25 நாட்களாக சமூக சேவகர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்துகிறார். இதுதொடர்பாகப் பிரதமர் மோடி இது​வரை வாய் திறக்​க​வில்​லை. அவர் தனது மவுனத்​தைக் கலைக்க வேண்​டும். பிரதமர் மோடி​யின் அரசி​யல் என்​பது வெறும் தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​களை நடத்​து​வதும் தேர்​தலில் வெற்றி பெறு​வதும் என்றே நினைக்​கிறார். மக்களுக்குப் பொறுப்​புட​னும் கடமை​யுட​னும் பதிலளிப்​பதும் அரசி​யல் கடமை​களில் ஒன்​று. நீட் விவகாரத்தில் பல மாணவர்கள் உயிரிழந்த பிறகும் கூட, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிர​தான் உங்களுக்கு ஏன் அவ்​வளவு முக்கியமானவராக இருக்​கிறார் என்​பதை நாட்​டுக்​குத் தெரிவியுங்​கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

ரூ.1 கோடி நிவாரணம்

நீட் வினாத் தாள் கசிவு விவ​காரத்​தில் அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும். போராட்​டத்​தில் பங்​கேற்ற மாணவர்​கள் மீது எப்​ஐஆர் பதிவு உட்பட எந்த சட்​டரீ​தி​யான நடவடிக்​கை​யும் எடுக்க கூடாது. நீட் வினாத் தாள் கசி​வால் பாதிக்​கப்​பட்டு உயி​ரிழந்த மாணவர்​களின் குடும்​பங்​களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்​டும். சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதப் போராட்​டத்தை முடிவுக்​குக் கொண்டு வர மத்​திய அரசு அவரிடம் பேச வேண்​டும் என்று சிஜேபி கட்​சி​யினர் அறி​வித்​துள்​ளனர்.

இந்த பதற்​ற​மான சூழ்​நிலை​யில், சிஜேபி​யினரின் அடுத்​தகட்ட போராட்ட அறி​விப்​பைத் தொடர்ந்து சிஆர்​பிஎப்-ஐ சேர்ந்த 20 கம்​பெனி துணைராணுவ​படையினர் நேற்று கொல்​கத்​தா​வில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்​தடைந்​தனர். டெல்​லி​யின் ஜந்​தர் மந்​தர் உள்​ளிட்ட முக்​கிய இடங்​களில் துணை ராணுவப் படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சிஜேபி-யினரின் போராட்​டத்​தையடுத்து பாது​காப்பு கருதி நீலம், மஞ்​சள் மற்​றும் வயலட் வழித்​தடங்​களில் உள்ள 16 மெட்ரோ நிலை​யங்​களைத் தற்​காலிக​மாக மூடு​வ​தாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்​வாகம் நேற்று காலை 11:30 மணிக்கு அறி​வித்​தது.

இந்நிலையில், நாடாளுமன்ற சாலை பகுதியில் நேற்றிரவு திடீரென மீண்டும் மோதல் ஏற்பட்டது. கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய டெல்லி பகுதியில் மட்டும் இணையதள சேவை நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற சாலை, ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி அருகில் உள்ள பகுதிகளில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது.

போலீஸ் மீது பெப்​பர் ஸ்பிரே

டெல்​லி​யில் கடந்த 20-ம் தேதி நடந்த போராட்​டத்​தில் பிரபல யூடியூபர் டாக்​டர் பார்த் கோயல் (10 லட்​சத்​துக்​கும் அதி​க​மான சந்​தா​தா​ரர்​களைத் தன் கணக்​கில் வைத்​திருப்​பவர்) கலந்து கொண்​டார். அப்​போது அவர் திடீரென தனது கையில் இருந்த பெப்​பர் ஸ்பிரேவை எடுத்து போலீஸார் மீது அடித்​தார். இதையடுத்து போலீ​ஸார் பெப்​பர் ஸ்பிரேவைப் பிடுங்கி அவரை இழுத்​துச் சென்​றனர்​. இதைத்​ தொடர்ந்​து சிஜேபி ஆதர​வாளர்​கள்​, பார்த் கோயலை இழுத்​துச்​ செல்​வதை வீடியோ​வாக எடுத்​து சமூக வலை​தளங்​களில்​ வெளி​யிட்​டனர். இந்​த வீடியோ வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT