இந்தியா

தொடர்ச்சியாக எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் ட்ரோன்கள் மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்​மு-​காஷ்மீர் ரஜோரி மாவட்​டத்​தின் எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோடு (எல்​ஓசி) வழி​யாக நாட்​டுக்​குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்​தான் ட்ரோன்​கள் மீது இந்​திய ராணுவத்​தினர் துப்​பாக்​கி​யால் சுட்டு தாக்​குதல் நடத்​தினர்.

இதுகுறித்து ராணுவ அதி​காரி​கள் கூறுகை​யில், ‘‘ரஜோரி மாவட்​டத்​தின் மஞ்​சகோட் செக்​டாரில் பாகிஸ்​தான் ட்ரோன்​கள் வட்​டமடித்​தன. சிறிது நேரம் இந்​திய எல்​லைக்​குள் பறந்த அந்த ட்ரோன்​களை குறி​வைத்து இந்​திய ராணுவம் துப்​பாக்​கிசூடு நடத்​தி​யது. இதைத்​தொடர்ந்து அந்த ட்ரோன்​கள் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​திக்​குள் தப்​பிச் சென்​றன” என்​றனர்.

இந்த சம்​பவம் குறித்து ராணுவத் தளபதி உபேந்​திர திவேதி கூறுகை​யில், ‘‘கடந்த மூன்று நாட்​களாக ஜம்மு எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் ட்ரோன்​களின் நடமாட்​டம் அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்​து, பாகிஸ்​தான் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்​குநரிடம் (டிஜிஎம்ஓ) கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அன்று நவ்​ஷேரா செக்​டார் மற்​றும் பூஞ்ச் மாவட்​டத்​தின் மன்​கோட், சம்பா மாவட்​டத்​தின் ராம்​கர் உள்​ளிட்ட பகு​தி​களில் ட்ரோன்​களின் நடமாட்​டம் கண்​டறியப்​பட்​டது.

முன்​ன​தாக, வெள்​ளிக்​கிழமை இரவு சம்பா மாவட்​டத்​தின் பாலோரா கிராமத்​தில் ட்ரோன் மூலம் வீசப்​பட்ட இரண்டு பிஸ்​டல்​கள், மூன்று மேகசின்​கள் மற்​றும் ஒரு கையெறி குண்டு ஆகிய​வற்றை பாது​காப்​புப் படை​யினர் கைப்​பற்​றினர்.

இதேபோன்று ரஜோரி​யின் சிங்​குஸ் பகு​தி​யில் உள்ள துங்கா காலா எல்லை வழி​யாக பாகிஸ்​தான் ட்ரோன்​கள் நுழைந்​தன. உடனடி​யாக விழிப்​புடன் செயல்​பட்ட இந்​திய வீரர்​கள் அதனை விரட்​டியடித்​தனர். பாகிஸ்​தான் இத்​தகைய தொடர்ச்​சி​யான அத்​து​மீறல்​களை அடுத்து எல்​லைப் பகு​தி​களில் பாது​காப்​புப்​ படை​யினர்​ உஷார்​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT