இந்தியா

நாடாளுமன்றத்தில் புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நள்ளிரவில் தர்ணா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தின் பெயர், விக்‌ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கி​ராமின்) (விபி - ஜி ராம் - ஜி) என்று மாற்​றம் செய்​யப்​பட்டுள்​ளது.

இதை கண்​டித்​தும், மசோ​தா​வின் குறிப்​பிட்ட அம்​சங்​களை எதிர்த்​தும் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​பிக்​கள் நாடாளு​மன்ற வளாகத்​தில் வியாழக்​கிழமை நள்​ளிரவு தர்​ணாவை தொடங்​கினர். இந்த தர்ணா நேற்று மதி​யம் 12 மணி வரை நீடித்​தது.

இதே மசோதா தொடர்​பாக காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உட்பட பல்​வேறு எதிர்க்​கட்​சி களை சேர்ந்த எம்​பிக்​கள் நேற்று காலை நாடாளு​மன்ற வளாகத்​தில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்​தினர். அப்போது பிரி​யங்கா கூறும்​போது, “குளிர்​கால கூட்​டத் தொடரின் கடைசி நாட்​களில் விபி - ஜி ராம் - ஜி மசோ​தாவை மத்​திய அரசு திட்​ட​மிட்டு நிறைவேற்றி உள்​ளது. தேசத்​தந்தை காந்​தி​யடிகளின் பெயர் மசோ​தா​வில் இருந்து நீக்​கப்​பட்டு உள்​ளது. இதை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம்” என்று தெரி​வித்​தார்.

திமுக எம்பி திருச்சி சிவா கூறும்​போது, “காந்​தி​யின் பெயர் நீக்​கப்​பட்டு உள்​ளது. நாடாளு​மன்ற வளாகத்​தின் பின்​புறத்​துக்கு காந்​தி, அம்​பேத்​கர் சிலைகள் இடமாற்​றம்​ செய்​யப்​பட்​டு உள்​ளன” என்​று குற்​றம்​ ​சாட்​டி​னார்​.

SCROLL FOR NEXT