இந்தியா

மைசூரு சாண்டல் சோப் விளம்பர தூதராக தமன்னா - பாஜக, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக அரசின் சோப்பு மற்​றும் டிடர்​ஜென்ட் நிறுவனத்​தின் கீழ் மைசூரு சாண்​டல் சோப்பு மீண்​டும் புதுப்பொலிவுடன் நேற்று அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. 108 ஆண்டுகள் பழமை​யான இந்த சோப்​பின் புதிய விளம்பர தூத​ராக நடிகை தமன்னா நியமிக்​கப்​பட்​டார். இதற்​காக அவருக்கு ரூ.6.2 கோடி ஊதி​ய​மாக வழங்​கப்​பட்​டது.

பெங்​களூரு​வில் நேற்று நடை​பெற்ற அறி​முக விழா​வில் கர்​நாடக தொழில் துறை அமைச்​சர் எம்​.பி.​பாட்​டீல், நடிகை தமன்னா ஆகியோர் பங்​கேற்​றனர். அப்​போது எம்​.பி.​பாட்​டீல் பேசுகை​யில், “மைசூரு சாண்​டல் சோப்பு விளம்​பரத்​தில் நடிப்​ப​தற்கு ஒப்புக்கொண்​டதற்​காக நடிகை தமன்​னா​வுக்கு நன்​றி. இவருக்கு உலகளவில் இருக்​கும் பிரபலத்​தால் வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மைசூரு சாண்​டல் சோப்​பின் விற்​பனையை ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

          

கர்​நாடக மாநிலத்தை சேராத நடிகை தமன்​னாவை விளம்பர தூதராக நியமித்​ததற்கு பாஜக, மஜத ஆகிய எதிர்க்​கட்​சிகளும் கன்னட அமைப்​பினரும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். கர்நாடக நடிகைகள் ரம்​யா, ரஷ்மி​கா, ருக்​மணி வசந்த் உள்ளிட்டோர் இருக்​கும்​போது தமன்​னாவை நியமித்​தது ஏன் என கேள்வி எழுப்​பி உள்​ளனர்​.

SCROLL FOR NEXT