மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

 
இந்தியா

India-US deal | அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு அனுமதி இல்லை: பியூஷ் கோயல்

சோளம், அரிசி, கோதுமை, ராகிக்கு சலுகை கிடையாது!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘இந்​தியா - அமெரிக்கா இடையே விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும். இந்த ஒப்​பந்​தம் பொன் எழுத்​துகளால் பொறிக்​கப்​பட்​ட​தாக இருக்​கும்’’ என்று மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​துள்​ளார்.

மத்​திய வர்த்​தக, தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் டெல்​லி​யில் நேற்று செய்​தி​யாளர்​களுக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்​தி​யப் பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வந்​தது. இந்த வரி 18 சதவீத​மாகக் குறைக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

          

இதுதொடர்​பாக இரு நாடு​களிடையே இடைக்​கால வர்த்தக ஒப்​பந்​தம் விரை​வில் கையெழுத்​தாக உள்​ளது. இந்த ஒப்​பந்​தத்​தால் இரு நாடு​களும் நிறை​வான பலன்​களை பெறும். குறிப்​பாக இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் அதிக பலன் அடை​வார்​கள்.

புதிய ஒப்​பந்​தத்​தின் மூலம் இந்​திய வைரம், நகைகள், ஸ்மார்ட்​போன்​கள், மின்​னணுப் பொருட்​கள், மருந்​துப் பொருட்​களுக்கு அமெரிக்க அரசு முழு​மை​யான வரி​விலக்கை அளிக்​கும். இதன்​மூலம் இந்​திய தொழில் துறை அபார வளர்ச்சி அடை​யும். அமெரிக்கா​வுக்​கான ஸ்மார்ட்​போன்​கள், மின்​னணுப் பொருட்​களின் ஏற்​றுமதி கணிச​மாக அதி​கரிக்​கும். இதே​போல மளி​கைப் பொருட்​கள், தேநீர், காபி, தேங்​காய், தேங்​காய் எண்​ணெய் உள்​ளிட்ட வேளாண் விளைபொருட்​களுக்கு அமெரிக்க அரசு வரி​விலக்கை அளிக்​கும். இதனால் இந்​திய விவ​சா​யிகள் மிகுந்த பலன் அடை​வார்​கள்.

அமெரிக்​கா​வின் மரபணு மாற்​றப்​பட்ட வேளாண் விளைபொருட்​கள் இந்​தி​யா​வில் விற்​பனை செய்ய அனு​மதி வழங்​க​வில்​லை. அமெரிக்​கா​வின் சோளம், அரிசி, கோது​மை, ராகி, தானி​யங்​களை இந்​தி​யா​வில் விற்​பனை செய்ய எவ்​வித சலுகை​யும் வழங்​க​வில்​லை. இந்​தி​யா​வில் வாழைப்​பழம், ஆரஞ்​சு, ஆப்​பிள், மாம்​பழம், கொய்​யா, காளான், கோகோ, கடுகு எண்​ணெய், அன்​னாசி சாகுபடி​யில் ஈடு​படும் விவ​சா​யிகளுக்கு எவ்​வித பாதிப்​பும் ஏற்​ப​டாது. நலன்​கள் முழு​மை​யாக பாது​காக்​கப்​படும். இந்​தி​யா​வில் இறைச்​சி, கோழி இறைச்​சி, பால் பொருட்​கள், சோயோபீன், சர்க்​கரை, தானி​யங்​களை உற்​பத்தி செய்​யும் விவ​சா​யிகளுக்கு சிறிய பாதிப்பு கூட ஏற்​ப​டாது. இந்​தி​யா​வில் எத்​த​னால், புகை​யிலை பொருட்​களை தயாரிக்​கும் நிறு​வனங்​களுக்​கும் பாதிப்பு ஏற்​ப​டாது.

அமெரிக்கா​வுட​னான ஒப்​பந்​தத்​தால் இந்​திய விவ​சா​யிகள், குறு, சிறு தொழில் துறை, கைத்​தறி, கைவினைத் துறை​களுக்கு எவ்​வித பாதிப்​பும் ஏற்​ப​டாது. இந்த துறை​களின் நலன்​கள் பாது​காக்​கப்​படும். இந்​தி​யா​வின் விமான உதிரி பாகங்​கள் உற்​பத்தி துறை, இயந்​திர​வியல் பொருட்​கள் உற்​பத்தி துறை, மருந்து உற்​பத்தி துறை அதி​கப் பலன்​களைப் பெறும்.

பிளாட்​டினம், கடி​காரம், கைக் கடி​காரம், எண்​ணெய் வகைகள், அலங்​காரப் பொருட்​கள், ரசாயனப் பொருட்​களுக்கு அமெரிக்க அரசு வரி விலக்கு அளித்​துள்​ளது. இதே​போல பல்​வேறு இந்​திய வேளாண் விளைபொருட்​களுக்​கும் வரி விலக்கு அளிக்​கப்​பட்​டிருக்​கிறது. இதனால் இந்​திய தொழில் துறை, இந்​திய விவ​சா​யிகள் நிறை​வான பலன் அடை​வார்​கள்.

வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்​துள்​ளோம். இந்த லட்​சி​யத்தை எட்ட அமெரிக்கா​வுட​னான வர்த்தக ஒப்​பந்​தம் ஊக்​கம் அளிக்​கும். புதிய ஒப்​பந்​தத்​தின் மூலம் அமெரிக்க நிறு​வனங்​கள் இந்​தி​யா​வில் அதிக முதலீடு​களை செய்ய உள்​ளன. புதுமை கண்​டு​பிடிப்​பு​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்பட உள்​ளன. இந்​தியா - அமெரிக்கா இடையி​லான ஒப்​பந்​தம் வரலாற்று சிறப்​புமிக்​கது. இந்த ஒப்​பந்​தம் பொன் எழுத்​துகளால் பொறிக்​கப்​பட்​ட​தாக இருக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

கூட்​டறிக்கை: இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் இணைந்து நேற்று வெளி​யிட்​கூட்​டறிக்​கையில் கூறி​யிருப்​ப​தாவது: பிப்​ர​வரி 13-ம் தேதி இந்​திய பிரதமர் மோடி​யும் அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் தொலைபேசி​யில் பேசினர். அப்​போது இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​பட்​டது. அதன்​படி இந்​தி​யப் பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 18 சதவீத வரி வி​திக்​கும். அமெரிக்​கா​வின் இயந்​திர​வியல் சாதனங்​கள், உணவு வகைகள், வேளாண் விளைபொருட்​களுக்கு இந்​திய அரசு வரி​விலக்​கு அளிக்​கும்​ அல்​லது வரியைக்​ குறைக்​கும்​.இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

அமலுக்கு வந்தது 25% கூடுதல் வரி ரத்து: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டு உள்ளார். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை வலுப்படுத்தும்: பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை சாத்தியமாக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையே ஆழமான நட்புறவு, நம்பிக்கை நீடிக்கிறது. இந்த நம்பிக்கையை இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை வலுப்படுத்தும். விவசாயிகள், தொழில் முனைவோர், குறு, சிறு தொழில் துறை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும். இருதரப்பு ஒப்பந்தத்தால் இந்தியாவில் பெண்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகும்.

புதுமை கண்டுபிடிப்புகள், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும். உலகத்தின் வளர்ச்சிக்கு இரு நாடுகளும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற லட்சியத்தை நோக்கி அதிவேகமாக முன்னேறி செல்கிறோம். இந்த நேரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு இரு நாடுகளின் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் மிகுந்த பலன் அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT