இந்தியா

அருணாச்சலில் சீன ஆக்கிரமிப்புகள் இல்லை: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்​தின் பல பகு​தி​களை சீனா உரிமை கொண்​டாடி வரு​கிறது. அந்த மாநிலத்தை ஜாங்​னான் என்​றும் சீனா குறிப்​பிட்டு வரு​கிறது.

சீனா​வின் இத்​தகைய போக்​குக்கு மத்​திய அரசு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரு​கிறது. குறிப்​பாக, அருணாச்சல பிரதேசத்​தின் 27 இடங்​களை உள்​ளடக்​கிய அதி​காரப்​பூர்வ வரைபடத்தை இந்​தியா அண்​மை​யில் வெளி​யிட்டு உள்​ளது.

இந்​நிலை​யில் அருணாச்சல பிரதேச மாநிலத்​தின் பல பகு​தி​களில் நமது ராணுவ வீரர்​கள் ரோந்​து, கண்​காணிப்​புப் பணிக்​குச் சென்​ற​போது சீன ராணுவம் தடுத்து நிறுத்​தி​யது என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று குற்​றம்​சாட்​டி​னார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் கூறும்​போது, “அருணாச்​சலின் பல இடங்​களில் இந்​திய ராணுவ வீரர்​கள் ரோந்து சென்​ற​போது அவர்​களை சீன ராணுவ அதி​காரி​கள் தடுத்து நிறுத்​திய சம்​பவம் நடந்​துள்​ளது.

இதுதொடர்​பாக பதில் அளிக்​காமல் மத்​திய பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் வாய்​மூடி மவுன​மாக உள்​ளார்” என்​றார். இதையடுத்து ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்​டுக்கு மத்​திய நாடாளு​மன்ற விவ​காரத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு விளக்​கம் அளித்​துள்​ளார்.

மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறிய​தாவது: அருணாச்சல பிரதேசத்​தில் கால்​நடை மேய்ச்​சல் குறித்து அங்கு வசிக்​கும் உள்​ளூர் மக்​களின் கவலைகள் அனைத்​தும் நியாய​மானவையே. அந்​தப் பகுதி மக்​களின் உணர்​வு​கள் அனைத்​தும் மிக முக்​கிய​மாக கருத்​தில் கொள்​ளப்​படும். ஆனால், அண்​மை​யில் அங்கு சீனா​வின் எந்த புதிய ஆக்​கிரமிப்​பும் நடை​பெற​வில்​லை. இவ்​வாறு கிரண்​ ரிஜிஜு தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT