இந்தியா

சம்​பவம் நடந்து 24 நாட்​கள் கடந்தும் சடங்கு செய்​தவர்​கள் மீது நடவடிக்கை இல்லை: ஜே.பி.நட்டாவுக்கு கார்கே கடிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில் கடந்த மாதம் 8-ம் தேதி நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்​றார்.

அதனைத் தொடர்ந்து 10-ம் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பாஜக-ஆர்​எஸ்​எஸ் ஆதர​வாளர்​கள் ‘சுத்​தி​கரிப்​பு’ (புனிதப்​படுத்​தும்) சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இந்​நிலை​யில், இந்த விவ​காரம் தொடர்​பாக மாநிலங்​களவை தலை​வரும், மத்​திய அமைச்​சரு​மான ஜே.பி. நட்​டாவுக்கு கார்கே கடிதம் எழு​தி​யுள்​ளார்.

அதில் அவர் கூறி​யுள்​ள​தாவது: ஹல்த்​வானி​யில் நடை​பெற்ற சம்​பவத்தை நாடாளு​மன்​றத்​தில் நான் கூறிய​போது, கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என உறுதியளித்தீர்​கள்.

ஆனால் சம்​பவம் நடந்து 24 நாட்​கள் கடந்தும் இது​வரை முதல் தகவல் அறிக்கை (எப்​ஐஆர்) கூட பதிவு செய்​யப்​பட​வில்​லை. இந்த சுத்​தி​கரிப்பு நடை​முறை நேரடி​யாக தீண்​டா​மை​யுடன் தொடர்​புடையது.

இதில் தொடர்​புடைய நபர்​கள் மற்​றும் அமைப்​பு​கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்​தர​காண்ட் முதல்​வருக்கு நீங்​கள் அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதனிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT