நிதிஷ் குமார்

 
இந்தியா

எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் மிக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர் எனற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவரான அவர், மத்திய அரசியலுக்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 16ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்நிலையில் அவர் தனது சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

எனினும், முதல்வர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் மாநிலங் களவை உறுப்பினராக நிதிஷ்குமார், ஏப்ரல் 9ம் தேதி பதவியேற்கலாம் எனத் தெரிகிறது.

          
SCROLL FOR NEXT