புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
வருமான வரிகளில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. மிக குறைவாகவே வரி வசூலிக்க நாங்கள் விரும்புகிறோம். இதேபோல் சுங்க வரியிலும் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் சுங்க வரிகளை தொடர்ந்து குறைத்து வருகிறோம். இதில் சீர்திருத்தத்தை கொண்டு வருவதுதான் எங்களின் அடுத்த மிகப் பெரிய வேலை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.